Header Ads



ரஞ்சனின் வீட்டில், திடீர் சோதனை

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்கவின்  வீட்டை தேடுதல் ஆணையுடன் பொலிஸார் சோதனை செய்துள்ளதாக  தெரிவித்துள்ளார்.

குறித்த செய்தியை ரஞ்சன் ராமநாயக்க தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், பொலிஸார் இப்போது ஒரு தேடுதல் ஆணையுடன் எனது வீட்டை சோதனை செய்தார்கள், அந்த ஆணையில் தேடுதலுக்கான காரணம்  எதுவும்  குறிப்பிடப்படவில்லை. நான் எந்த குற்றமும் செய்யவில்லை, ஆனால் நான் கைது செய்யப்பட்டால் நான் மருத்துவமனைக்கு அல்ல சிறைக்குச் செல்வேன். நான் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன், உண்மையை பேசுவதற்கான எந்தவொரு எதிர்விளைவையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Super and Genuine politician of Sri Lanka, get lessons from this bravery guy6.

    ReplyDelete

Powered by Blogger.