Header Ads



கசிப்பு விற்பனைக்கு எதிராக, குழந்தையுடன் போராடும் பெண் - கிளிநொச்சியில் அவலம்


கிளிநொச்சி கோணாவில் கிராம அலுவலர் பிரிவில் காந்திக்கிராமத்தில் அதிகரித்துள்ள கசிப்பை ஒழிக்காது விட்டால், தான் குழந்தையுடன் உயிரை மாய்த்துக்கொள்ளவுள்ளதாக பெண் ஒருவர் வீதியில் தனிநபராக போராட்டத்தில் இன்று (02) ஈடுப்பட்டுள்ளார்.

காந்தி கிராமத்தில் கசிப்பு பாவனை அதிகரித்துள்ளது எனவும் இதனால் தன்னைப் போன்ற பெண்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

அங்கு பெண்களுக்கான பாதுகாப்பான சூழல் காணப்படவில்லை என, தெரிவிக்கும் அவர், கசிப்பு பாவனையாளர்களால் அச்சமான நிலைமையே ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குடும்பத்தில் நிம்மதியில்லை, பாடசாலை பிள்ளைகள் நிம்மதியாக படிக்க முடியாதுள்ளதுடன், பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“வீடுகளின் வாசல்கள் வரை கசிப்பு விற்பனை வந்துவிட்டது. எப்பொழுதும் மிகவும் மோசமான வார்த்தைப் பிரயோகங்கள், சொல்ல முடியாத  அளவுக்கு கசிப்பு பாவனையால்  அவலம் ஏற்பட்டுள்ளது. 

“இனியும் பொறுத்துக்கொள்ள முடியாத நிலையிலேயே நான் எனது குழந்தையுடன் இம்முடிவுக்கு வந்துள்ளேன். இனியும் என்னால் இந்த அவலத்தை அனுபவித்துக்கொண்டு வாழ முடியாது” என்கிறார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்.

கசிப்பு விற்பனை தொடர்பில் கிராம அலுவலர், மற்றும்  பொலிஸாருக்கு அறிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை  எனவும் அந்தப் பெண் மேலும் கூறியுள்ளார்.

-மு.தமிழ்ச்செல்வன்   

2 comments:

Powered by Blogger.