Header Ads



நாளாந்தம் பௌத்த எழுச்சி - மஹா சங்கத்தினரை இழிவுபடுத்திய காலம் முடிவு - மஹிந்த


இந்த ஆண்டு தேர்தல் வருடமாகும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.  மலர்ந்துள்ள புத்தாண்டு மக்களின் உறுதிமொழிகளை சமகால அரசாங்கம் நிறைவேற்றும் ஆண்டாகவும் அமையும் என்றும் பிரதமர் கூறினார். 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று கதிர்காம புனிதத் தலம் உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். 

பிரதமர் முதலில் கதிர்காம புனிதத் தலத்தில் வழிபாடுகளில் ஈடுபட்hர் அதன்போது புனிதத் தலத்தின் அபிவிருத்திக்கான சகல பணிகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் என்று பிரதமர் கூறினார். 

நாளாந்தம் ஏற்பட்டுவரும் பௌத்த எழுச்சியினால், சமூகத்திற்கு சிறந்த நன்மைகள் கிடைத்திருக்கின்றன. மஹா சங்கத்தினரை இழிவுபடுத்திய காலம் முடிவிற்கு வந்திருப்பதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார். 

இதனைத்தொடர்ந்து, தங்காளை பிரதேசத்தில் அமைந்துள்ள வழிபாட்டுத் தலங்களுக்கும் பிரதமர் விஜயம் செய்தார்.; இங்கு கருத்து தெரிவிக்கையிலேயே தேர்தல் தொடர்பாக குறிப்பிடார். 

ஒரு லட்சம் பேருக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட பிரதமர் பொதுத் தேர்தலின் பின்னரே முழுமையான அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த முடியும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

No comments

Powered by Blogger.