Header Ads



ஜனாதிபதி கோட்டாபயவுடன் இணைந்து பணியாற்றுவதில், எந்த சிக்கலும் இல்லை - ரவி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்து பணியாற்றுவதில் எந்த சிக்கலும் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

மீண்டும் அனைவரும் இணைந்து பணியாற்றக்கூடிய தேசிய அரசாங்கத்தை உருவாக்கினால், அது மிக சிறந்ததாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அண்மையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ரவி கருணாநாயக்க இதனை கூறியுள்ளார்.

இதன்போது ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருக்கும் பிரச்சினை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர்,

ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கும் பிரச்சினைகளை ஊடகங்களே அதிகமாக தூண்டுகின்றன. கட்சிக்குள் இருக்கும் பிரச்சினைகளை சந்திகளில் பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை.

அத்துடன் புதிய தோற்றத்தில் கட்சியை வெற்றி பெற செய்யும் வலுவான வேலைத்திட்டம் தயாராக இருப்பதாகவும் ரவி கருணாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. சஜித் தலைவரானால் பல்டி அடிக்க பிள்ளையார் சுழி போடுகிறார்.

    ReplyDelete
  2. சஜித் தலைவரானால் பல்டி அடிக்க பிள்ளையார் சுழி போடுகிறார்.

    ReplyDelete

Powered by Blogger.