பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் அதிக கவனம், வதந்திகளில் எவ்வித உண்மையும் இல்லை
பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக வௌியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
வதந்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் ஷாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார்.
எனினும், பரவியுள்ள வதந்தி தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனடிப்படையில், அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் ஷாந்த கோட்டேகொட மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment