பிரதமராக பதவியேற்க, சுபநேரம் பார்க்கும் சஜித்
அமைச்சர் சஜித் பிரேமதாச பிரதமராக பதவிப்பிரமானம் செய்வதற்கான சுப நேரம் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.
அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இதனை தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.
பிரதமராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவ்வாறான நிலையில், அமைச்சர் சஜித் பிரேமதாச பிரதமராக பதவிப்பிரமானம் செய்வதற்கான சுப நேரம் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன கூறியுள்ளார்.
Post a Comment