அரசாங்கம் அறவிடவுள்ள, புதிய வரி
கடனட்டை மற்றும் இலத்திரனியல் பணப்பறிமாற்ற அட்டைகளை பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்யும் போது அதற்கு வரி அறிவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கைக்கு வெளியே மேற்கொள்ளப்படுகின்ற இவ்வாறான கொடுப்பனவுகளுக்கே இந்த வரி அறிவிடப்படவுள்ளது.
அதற்கமைய கொடுப்பனவு செய்யும் தொகையில் 3.5 சதவீதம் வரியாக அறவிடுவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இதனையடுத்து, 2018ஆம் ஆண்டு 35 ஆம் இலக்க நிதிச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment