சிங்களப் பெண்களை, முஸ்லிம் நாடுகளுக்கு அனுப்பக்கூடாது - முஸ்லிம் கடைகளைப் பகிஷ்கரிப்போம்
முஸ்லிம்களுக்கு ஹலால் அவசியமென்று பாராளுமன்றில் பிரேரணையொன்று கையளிக்கப்பட்டுள்ளது. சபாநாயகரும் அப்பிரேரணையை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
A.R.A Fareel
இது சிங்கள பௌத்த நாடு. ஒவ்வொருவருக்கும் தாம் நினைத்தது போன்று செயற்பட முடியாது. ஹலால் சட்டமாக்கப்பட்டால் நாமனைவரும் முஸ்லிம்களின் கடைகளைப் பகிஷ்கரிப்போம் என பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
பொதுபலசேனா அமைப்பு பலாங்கொடை கும்பகொட ஸ்ரீ சுதர்சன மகா விகாரை மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது;
“ஹலால் அவசியமென்று பாராளுமன்றத்தில் பிரேரணையொன்று கொண்டு வரப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார். அத்தோடு உடனடியாக அதனை நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் என்னை வேண்டினார். ஹலாலை சட்டமாக்கி வரி அறவிட்டுக் கொள்வதாகவே முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஹலாலை மீண்டும் சட்டமாக்கிக் கொள்ள முயன்றால் நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களின் வியாபாரங்களையும் நாம் பகிஷ்கரிப்போம். இதனால் அப்பாவி முஸ்லிம் வியாபாரிகளே பாதிக்கப்படுவார்கள். அதனால் உடனடியாக ஹலால் பிரேரணையை வாபஸ் பெற்றுக் கொள்ளுமாறு நாம் வேண்டிக் கொள்கிறோம். கடந்த சில காலம் ஹலால் பிரச்சினை இருக்கவில்லை. ஹலால் இல்லையென்று முஸ்லிம்கள் சாப்பிடாமல் இருந்தார்களா? எவராவது பசியினால் இறந்தார்களா? மீண்டும் ஹலாலுக்கு எதிராக நாம் போராட்டங்களை ஆரம்பிக்கவுள்ளோம்.
தொல்பொருள் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு தொல்பொருள் திணைக்களத்தினால் இன்னும் முடியாமல் இருக்கிறது. பலாங்கொடையில் கூரகலவுக்கும் பொத்துவிலில் முகுது மகா விகாரைக்கும் தொல்பொருள் சட்டம் அமுல்படுத்தப்படுவதில்லை. தொல்பொருள் திணைக்களத்தில் அதிகமானோர் சிங்களவர்களாக இருந்தும் இச்சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.
கடந்த காலங்களில் 7000 க்கும் மேற்பட்ட சிங்களப் பெண்களை முஸ்லிம் இளைஞர்கள் திருமணம் செய்து கொண்டு அவர்களை இஸ்லாத்துக்கு மதம் மாற்றிக் கொண்டுள்ளார்கள். எங்களது பெண்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அடிமை வேலைகளுக்கு அனுப்ப வேண்டாம் என வேண்டிக் கொள்கிறோம்.
இலங்கையில் எமது பெண்களுக்கு மாதம் 40 ஆயிரம் ரூபா வரையில் தொழில் செய்து உழைத்துக் கொள்ள முடியும். எமது பெண்கள் மத்திய கிழக்கில் வேலை செய்யாவிட்டால் நாங்கள் இறந்துவிடப் போவதில்லை.
கிழக்கில் ஷரீஆ பல்கலைக்கழகம் திறக்கப்படக்கூடாது. அது தடை செய்யப்பட வேண்டும். எமது பிக்குகள் ஐயாயிரம் பேர் வரையில் ஒன்று சேர்ந்து அப்பல்கலைக்கழக கட்டடத்தின் கற்களை ஒவ்வொன்றாக அகற்ற வேண்டும்.
2014 இல் நாம் ஐ.எஸ். பயங்கரவாதம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்தோம். நாம் அன்று கூறியவற்றை கவனத்திற் கொண்டிருந்தால் 300 பேர் வரையில் பலியாகி இருக்க மாட்டார்கள். அவர்களைக் காப்பாற்றியிருக்க முடியும். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் மீது பற்றுக் கொண்டுள்ள வேட்பாளருக்கே வாக்களிக்க வேண்டும்” என்றார்.
உலக மஹா நடிகன்
ReplyDeleteThat good idea don´t send your sinhala ladies Middle east for jobs and don´t take any help halal funds from Muslims countries.
ReplyDeleteஇந்தாளுக்கு எல்லாம் தகுந்த பதிலடி கொடுக்க முடியும். இந்தாளுக்கோ டமிழ் தெரியாது. Jaffna Muslim மும் மொழிபெயர்த்து கொடுக்க மாட்டாங்க. எழுதி; சொல்லி என்ன பிரயோசனம்.
ReplyDeleteHodai ehanag ghenu okkama yavanda onea miyan mar balatai
ReplyDeleteபலிருக்கிறவன் பகோடா தின்ரான்.. நீ ஏன்டா சும்மா...
ReplyDelete