Header Ads



கோத்தாபய, டக்ளஸ், கருணா ஆகிய 3 பேரையும் படுகொலைசெய்ய புலம்பெயர் தமிழர்கள் திட்டம்

பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவை படுகொலை செய்வதற்கு பாதாள உலக குழுவினருடன் பேரம் பேசப்பட்டுள்ளதாகவும், இதனால் அவரது பாதுகாப்பை அதிகரிக்குமாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கோரியுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பளை மருத்துவமனையின் பொறுப்பதிகாரியான மருத்துவர் சின்னையா சிவரூபனிடம் விசாரணை நடத்தி வரும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரே கோத்தாபய ராஜபக்சவின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு கோரியுள்ளனர்.

அதிபர் தேர்தலில் போட்டியிடும் கோத்தாபய ராஜபக்சவை படுகொலை செய்வதற்காக துப்பாக்கிதாரிகளின் குழுவொன்றை புலம்பெயர் தமிழர்கள் நிறுத்தியுள்ளனர் என்று மருத்துவர் சிவரூபன் தகவல் வெளியிட்டுள்ளார் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

புலிகள் இயக்க முன்னாள் போராளிகளின் உதவியுடன் கோத்தாபய ராஜபக்சவை படுகொலை செய்வது கடினம் என்பதை புரிந்து கொண்ட புலம்பெயர் தமிழர்கள்,  இதற்கான பொறுப்பை பாதாள உலக குழுவினரிடம் ஒப்படைத்துள்ளனர் என்றும் மருத்துவர் சிவரூபன், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் கூறியுள்ளார்.

இதற்காக பெருமளவு பணத்தை புலம்பெயர் தமிழர்கள் பாதாள உலக புள்ளிகளுக்கு வழங்கியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோத்தாபய ராஜபக்ச தவிர, டக்ளஸ் தேவானந்தா, கருணா உள்ளிட்ட பலரும் புலம்பெயர் தமிழர்களின் தாக்குதல் பட்டியலில் இருப்பதாகவும், மருத்துவர் சிவரூபன் தெரிவித்துள்ளார் எனவும், பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கூறியதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

3 comments:

  1. இதுதான் தமிழர்களின் விளையாட்டு,எப்போதும் இந்த நாட்டை சீரழிப்பதே அவர்களின் திட்டம்.36 வருடங்கள் சீரழித்து விட்டு இன்னும் சீரழிக்க முயற்ச்சி.ஆனால் Muslim கள் இந்த நாட்டை கட்டியெழுப்ப பாடுபடுபவர்கல்.இனி சிங்கள இனம் புரிந்து கொள்ளும்.ajan இனி ரத்ன தேரர் எந்த உன்னாவிரதத்துக்கும் வரமாட்டார்.ஏனெனில் அவருக்கு உண்மை நிலை கொஞ்ஞம் கொஞ்ஞமாக இனி புரிந்துவிட்டது.

    ReplyDelete
  2. கருணா நீயும் நானுமா வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

    ReplyDelete
  3. First should check who is this ajan(terrorist or racist )

    ReplyDelete

Powered by Blogger.