யாழ் ஒஸ்மானியா கல்லூரி வளாகத்தில் CCTV கமராக்கள்
- பாறுக் ஷிஹான் -
யாழ் ஒஸ்மானியா கல்லூரி வளாகத்தில் சீசீரீவி கமராக்கள் பொருத்தப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது.
யாழ் ஒஸ்மானியா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் 71 ஆவது அணியினர் பாடசாலையின் அபிவிருத்தி மற்றும் கட்டுமானங்களை ஊக்குவிக்கும் முகமாக குறித்த சிசிடிவி கமராக்களை பாடசாலையில் பொருத்தி உத்தியோகபூர்வமாக பாடசாலை அதிபர் சேகு ராஜிதுவிடம் கையளித்துள்ளனர்.
சனிக்கிழமை(9) நடைபெற்ற இந்நிகழ்வில் 71 ஆவது பழைய மாணவர் அணியினர் கலந்து கொண்டு அதிபரிடம் குறித்த கட்டமைப்பினை வழங்கியதுடன் கல்லூரியின் அபிவிருத்தி மற்றும் மாணவர்களை வழிகாட்டி ஊக்கிவிக்கும் வகையில் அன்பளிப்பு பொருட்களை வழங்கியுள்ளனர்.இதன் போது தொழிலதிபரும் டொப்பாஸ் உரிமையாளருமான எம்.நஸ்ரூன் உள்ளிட்ட அதிதிகள் பலர் கலந்து சிறப்பித்தனர் .
இந்த நிகழ்வின் போது வருகை தந்த அதிதிகளுக்கு கல்லூரி அபிவிருத்தி மற்றும் கல்வி ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாகவும் யாழ் மக்களின் மீள்குடியேற்றம் அபிவிருத்தி விடயங்கள் தொடர்பாகவும் அதிபரால் எடுத்துரைக்கப்பட்டது .மேலும் யாழ் ஒஸ்மானியா கல்லூரியின் பழைய மாணவர் சங்கமும் பெற்றோர் சங்கமும் இணைந்து சீ.சீ.டி வி கமராக்களை இணைப்பதற்கான திட்டத்தை கையளித்த பழைய மாணவர்கள் 71 அணியினருக்கு நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
Post a Comment