Header Ads



எமது வேட்பாளரை ஜனாதிபதியாக்கும், பொறுப்பை மக்கள் ஏற்கவேண்டும் - மஹிந்த

இந்த அரசாங்கத்தினால் சுமத்தப்பட்டுள்ள வரிச்சுமையானது, எனது காலத்தையும் விட இரு மடங்காகும் என, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தெஹியோவிட்ட பகுதியில் நேற்று (19ஆம் திகதி) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பேசும்போது, ஜனாதிபதித் தேர்தல் குறித்து அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும்,

இந்த அரசாங்கத்தினால் சுமத்தப்பட்டுள்ள வரிச்சுமையானது, எனது காலத்தையும் விட இரண்டு மடங்காகும். 4 வருடங்கள் கடந்த போதிலும், நாட்டு மக்களுக்கு இதுவரை எதனையும் செய்யவில்லை. இந்த அரசாங்கம் பழிவாங்கும் செயற்பாடுகளையே அடிப்படையாக கொண்டுள்ளது. வாழ்க்கை செலவு நாளாந்தம் அதிகரிக்கின்றது. பொருளாதாரம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. நாடு வரலாற்றில் எப்போதும் இவ்வாறு கடன் பெற்றதில்லை. இந்த அரசாங்கம் அதனை செய்துள்ளது. தேர்தல் முறை முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. வெற்றிபெறும் வேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவோம். அந்த வேட்பாளரை வெற்றிபெறச் செய்யும் பொறுப்பை நீங்கள் ஏற்க வேண்டும்

என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.