கடிந்துகொண்ட ஜனாதிபதி, விடாப்பிடியாக நின்ற அமைச்சர்
பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதித் திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டார் மைத்ரி.
நேற்று அமைச்சரவை கூட்டத்தில் கல்வியமைச்சரை கடிந்துகொண்டார்.
உள்ளூரில் எவருக்கும் கொடுக்காமல் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு இதனை கொடுத்த நோக்கம் என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.
வரவு செலவுத் திட்டம் காரணமாக நேற்றைய அமைச்சரவைக் கூட்டம் பாராளுமன்றத்தில் நடந்தது.
காப்புறுதியை ரத்துச் செய்வது தொடர்பான முக்கியமான கூட்டம் இன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது.
சரியான கேள்விமனு கோரியே இந்த காப்புறுதி ஒரு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு அது அமுலுக்கும் வந்துள்ளதால் இதனை ரத்துச் செய்வது கடினமென கல்வியமைச்சரும் விடாப்பிடியாக நிற்கிறார் என தகவல்...!
Siva Ramasamy
சுரக்ஷா காப்புறுதி போல் கபொத.உ.வகுப்பு மாணவர்களுக்கு டப்லட் கொடுக்கும் கல்வி அமைச்சரின் திட்டத்தின் பின்னும் பாரிய மோசடி இருப்பது தெரிகிறது. மாணவர்களின் நலன்களை முற்படுத்தி நாட்டு மக்களின் பணத்தைக் கொள்ளையிடும் ஜதேகட்சியும் அதன் கொள்ளைக்கூட்டமும் ஒருபோதும் நாட்டு மக்களுக்கோ நாட்டுக்கோ எந்தப் பயனும் இருக்காது.
ReplyDelete