"செய்யாத குற்றத்திற்காகவே, ஞானசாரர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார்"
ஞானசாரர் செய்யாத குற்றத்திற்காகவே சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கிலேயே இந்த துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் செயற்பாட்டை முன்னெடுத்திருக்கின்றோம். கொலைக்குற்றம் இழைத்தோ, ஊழல் மோசடிகளில் ஈடுபட்டோ ஞானசாரர் சிறை செல்லவில்லை. மாறாக 30 வருடகால யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வருவதற்கு தம்மை அர்ப்பணித்து செயற்பட்ட புலனாய்வு அதிகாரிகளை சிறையிலடைப்பதற்கு எதிராகவே அவர் குரல் கொடுத்தார். எனவே நாட்டு மக்கள் அனைவரும் ஞானசார தேரரை மீட்கும் நடவடிக்கைக்கு பங்களிப்பு வழங்க வேண்டும் என ‘சிங்களே அபி” அமைப்பின் தலைவர் ஜம்புரேவெல சந்தரத்ன தேரர் தெரிவித்தார்.
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நியாமற்ற வகையிலேயே சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார் என்ற விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு நாடளாவிய ரீதியில் 50 இலட்சம் துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கும் செயற்பாட்டை பொதுபலசேனா அமைப்பு நேற்றைய தினம் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக ஆரம்பித்திருந்தது.
ஞானசாரர் செய்யாத குற்றத்திற்காகவே சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கிலேயே இந்த துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் செயற்பாட்டை முன்னெடுத்திருக்கின்றோம். குறித்தவொரு வழக்கு தொடர்பில் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது எனும் பட்சத்தில் அது குறித்து முறைப்பாடு செய்யும் உரிமை அனைத்துப் பிரஜைகளுக்கும் உண்டு. ஆனால் அதனை உரியவர்களிடத்தில் முறைப்பாடு செய்ய முடியாமையின் காரணமாகவே மக்களிடத்தில் இதனை தெளிவுபடுத்துகின்றோம்.
தற்போது சட்டமா அதிபர் திணைக்களம் அரசியல்வாதிகளின் தேவைகளுக்கு அமைவாக செயற்பட்டு வருகின்றதொரு நிலையே உள்ளது. அதனால் சமூகத்தின் நன்மைக்காக செயற்படுகின்றவர்கள் தண்டிக்கப்படுகின்றார்கள். அத்தகைய ஒருவர்தான் ஞானசார தேரர். அவர் செய்யாத குற்றத்திற்காகவே தண்டிக்கப்பட்டுள்ளார் என்பதை நிரூபிப்பதற்கு போதியளவான சாட்சிகள் எம்மிடம் உள்ளன.
ஞானசாரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவார் என்ற நம்பிக்கையுள்ள போதிலும், அவ்வாறு விடுவிக்கப்படவில்லை எனின் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் முறைப்பாடு செய்யவும் தயாராகவே இருக்கின்றோம். கொலைக்குற்றம் இழைத்தோ, ஊழல் மோசடிகளில் ஈடுபட்டோ ஞானசாரர் சிறை செல்லவில்லை. மாறாக 30 வருடகால யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வருவதற்கு தம்மை அர்ப்பணித்து செயற்பட்ட புலனாய்வு அதிகாரிகளை சிறையிலடைப்பதற்கு எதிராகவே அவர் குரல் கொடுத்தார். வசந்த கரன்னாகொடவை கைது செய்வதற்கு திட்டமிடப்படுகின்றது என்ற தகவல்களின் ஊடாக யுத்தத்தை வென்றெடுத்தவர்களை சிறையிலடைக்கும் செயற்பாடுகள் இன்னமும் தொடர்கின்றன என்பது புலனாகின்றது. எனவே, நாட்டு மக்கள் அனைவரும் ஞானசார தேரரை மீட்கும் நடவடிக்கைக்கு பங்களிப்பு வழங்க வேண்டும் என்றார்.
Unwanted news for us. Please don't promote this Terror Monk. By Publishing unwanted/useless news.
ReplyDeleteThis Terror Monk already destroyed the unity of all community and the Buddhism..
This Terror Month damaged the society more than the Drugs..
உலகில் ஏனைய நாடுகளைப் போல இந்த நாடும் சட்டத்தின் ஆதிபத்தியத்தில் தான் இயங்குகின்றது.சட்டத்தைக் கண்மூடித்தனமாக விமர்சிப்பதும் சட்டத்தைப் பாதுகாக்கும் முக்கிய நிறுவனங்களான நீதிமன்றம், கௌரவ நீதிபதிகளைக் கேவலமாகவும் அநாகரீகமான முறையில் வசைபாடுவதும் இந்த நாட்டின் சட்டத்தை அவமதிப்பதைப் போன்ற பாரதூரமான குற்றமாகும் இந்த உண்மை ஏனைய நாட்டுப் பிரஜைகளைப் போல் இந்த நாட்டின் பிரஜைகளும் அறிந்து அவற்றை உரியமுறையில் மதித்து கௌரவிக்க தெரிந்துவைத்திருக்க வேண்டும் என சட்டம் ஒவ்வொரு பிரஜையிடமும் எதிர்பார்க்கின்றது. அதற்கு மாற்றமாக சட்டத்தை கண்மூடித்தனமாக வசைபாடி கௌரவ நீதிபதிகளையும் நிந்தித்தால் அதன் விளைவைத்தான் இந்த சாமியார் அனுபவிக்கின்றார். எத்தனை ஆயிரம் பேர் ஒன்றுகூடி இந்த சாமியார் குற்றம் செய்யவே இல்லை என பறைசாடினாலும் நீதிமன்றத்தின் தீர்ப்பு தான் இறுதியானது என்பதை அனைவரும் விளங்கிக் கொள்ளவேண்டும். பொய்யையும் உண்மையைப் பிரழ்ந்த இட்டுக் கட்டுக் கதைகளையும் பரப்பி பொதுமக்களை வழிகெடுக்கும் முயற்சியும் சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது என்பதையும் உரியவர்கள் விளங்கிக்கொள்ள இத்தால் ஞாபகப்படுத்துகின்றேன்.
ReplyDeleteIs it?
ReplyDeleteதலைப்பு சரி, ஏனென்றால் அவர் செய்த குற்றத்துக்கு இன்னும் தண்டனை வழங்கப்படவில்லை.
ReplyDelete