Header Ads



CTJ யின் கவனத்திற்கு, ஜப்பானிலிருந்து மௌலவி ஷஹாப்தீன்

பெண்கள் முகம் மூடுவது பற்றிய CTJ அப்துர் ராசிக்கின் கீழ்த்தரமான கருத்து முகத்தை மூடும் முஸ்லிம் பெண்களின் அடிப்படை உரிமை மீறல் என்பதை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும், காரணம் எந்த பெண்ணும் பிறரின் வற்புறுத்தலின் பேரில் முகத்தை மறைக்கவில்லை அவர்களின் விருப்பத்தின் பேரிலேயே மறைக்கின்றார்கள் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். எனவே இது ஒரு  குறுகிய முஸ்லிம்களின் பிரச்சினை அன்றி இது ஒட்டு மொத்த முஸ்லிம் உம்மத்தின் அடிப்படை பிரச்சினையாகும்  .

எனவே இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஓன்று. எனவே இதை தனிப்பட்ட ஒரு சிறு குழு ஒரு அறைக்குள் இருந்து கூடிப் பேசுவதில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது . தவ்ஹீத் ஜமாத்தின் முக்கியஸ்தர்கள் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா, முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மற்றும் முஸ்லிம் மூத்த சட்டத்தரணிகள் ஓன்று கூடி பேசி அதன் முடிவை சகல பத்திரிகைகளிலும்  பிரசுரிக்க வேண்டும்.

இரண்டாவதாக அன்றைய தினம் சகல ஊடகங்களுக்கு மத்தியில் தவ்ஹீத் மூத்த தலைவர் ஜம்மிய்யதுல் உலமா தலைவர் அரசியல் தலைவர் மற்றும் சட்டத்தரணிகள் அனைவரும் இது பற்றி கருத்துத் தெரிவிப்பதோடு CTJ யை கண்டிக்கவும் வேண்டும். இப்படி செய்வதன் மூலம்தான் இதற்க்குப் பின்பும் இது போன்ற பிற்போக்கு சிந்தனைவாதிகளின் மாயையில் இருந்து, முஸ்லிம் உம்மத்தையும் முஸ்லிம்களின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகளையும் பாதுகாக்க முடியும் என்பது என்னுடைய கருத்து .

அத்தோடு எந்த மத குருவோடு  CTJ குழு தான்தோன்றித் தனமாக   பேச்சு வார்த்தை நடத்தினார்களோ, அதே மத குருவோடு மீண்டும்  சம்மந்தப் பட்ட மேற்சொன்ன குழுவினர் சகல ஊடகங்களுக்கு முன்னாளும்  தெளிவு படுத்தும் பேச்சுவார்த்தை ஒன்றை உடனடியாக நடாத்த வேண்டும்.நான்கு சுவருக்குள் நடாத்தும் எந்தவித  பேச்சுவார்த்தைகளினாளும் எந்த மாற்றத்தையும் காணமுடியாது .

மௌலவி M ஷஹாப்தீன் ரஹ்மானி  ( ஜப்பான் )

10 comments:

  1. masah allah brother abudur razeek he is excelent

    ReplyDelete
  2. Mawsook dont wash your hed

    ReplyDelete
  3. Sahabdeen mowlavi, உங்கள் கருத்தின் படி பெண்கள் எப்படி வேண்டும் என்றாலும் உடைகள் அணியலாம், அது அவரவர் சுதந்திரம்,இதுபோன்ற நல்ல கருத்துக்களை பதிவிடுங்கள்

    ReplyDelete
  4. மௌலவி ஷகாப்தீன் அவர்களே

    உங்களுக்கு இஸ்லாத்தின் நிலைப்பாடு இதுசம்பந்தமாக என்ன என்று விளங்கிக்கொள்ள முடியாவிட்டால் அதனை முதலில் விளங்கிக்கொள்ள முனையுங்கள் - வீணான பிடிவாதங்களை விட்டுவிட்டு.

    மார்க்கம் கடமையாக்காதவைகளை மார்க்கக்கடமையாக்க முயலாதீர்கள். மார்க்கம் சம்பந்தமாக இப்படியான தவறான புரிதல்களே இன்று முஸ்லீம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட காரணமாக அமைந்துள்ளது.

    முகத்தை முடுவதுதைான் பெண்களுக்கு பாதுகாப்பு என்று அவர்கள் நினைத்தால் அது அவர்களின் உரிமை. ஆனாலும் அவ்வாறான செயல்களுக்கு மார்க்கத்தில் அடைக்கலம் தேடவேன்டாம்.

    பெண்கள் முகத்தை முடுவதுதான் சிறந்தது என்பதால்தான் அல்லாஹ் அதனை நபி ஸல் அவர்களின் மனைவிகளுக்கு மாத்திரம் கடமையாக்கி - அதேநேரம் அது மற்றய பெண்களுக்கு சாத்தியமில்லை என்பதனாலேயே அதனை அல்லாஹ் அவ்வாறு ஏனைய பெண்கள்மீது கடமையாக்கவில்லை.

    எனவே கடமையில்லாத ஒன்றை மார்க்கக் கடமையாக மாற்றி மாரக்கத்தில் தடுமாறிக் கொன்டிருப்பவர்கள்தான் உங்களைப் போன்றவர்கள்.

    ReplyDelete
  5. Ohhh Japanilum muhattai moodi adippadai urimayo...????
    Evanayo ethirkkanum enpatherkkaaha summa ularaatheengo Moulavi....
    Talk to the real & fact.... Ulahattula islaam sollaatha intha muhatta moodinathaala evvalavo pirachna....Ottukka try pannungo...summaa...!!!
    Moulavi innum aaaalama padikanum neraya

    ReplyDelete
  6. மௌலவி ஷகாப்தீன் அவர்களே

    உங்களுக்கு இஸ்லாத்தின் நிலைப்பாடு இதுசம்பந்தமாக என்ன என்று விளங்கிக்கொள்ள முடியாவிட்டால் அதனை முதலில் விளங்கிக்கொள்ள முனையுங்கள் - வீணான பிடிவாதங்களை விட்டுவிட்டு.

    மார்க்கம் கடமையாக்காதவைகளை மார்க்கக்கடமையாக்க முயலாதீர்கள். மார்க்கம் சம்பந்தமாக இப்படியான தவறான புரிதல்களே இன்று முஸ்லீம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட காரணமாக அமைந்துள்ளது.

    முகத்தை முடுவதுதைான் பெண்களுக்கு பாதுகாப்பு என்று அவர்கள் நினைத்தால் அது அவர்களின் உரிமை. ஆனாலும் அவ்வாறான செயல்களுக்கு மார்க்கத்தில் அடைக்கலம் தேடவேன்டாம்.

    பெண்கள் முகத்தை முடுவதுதான் சிறந்தது என்பதால்தான் அல்லாஹ் அதனை நபி ஸல் அவர்களின் மனைவிகளுக்கு மாத்திரம் கடமையாக்கி - அதேநேரம் அது மற்றய பெண்களுக்கு சாத்தியமில்லை என்பதனாலேயே அதனை அல்லாஹ் அவ்வாறு ஏனைய பெண்கள்மீது கடமையாக்கவில்லை.

    எனவே கடமையில்லாத ஒன்றை மார்க்கக் கடமையாக மாற்றி மாரக்கத்தில் தடுமாறிக் கொன்டிருப்பவர்கள்தான் உங்களைப் போன்றவர்கள்.

    ReplyDelete
  7. தினகரன் 16.10.1999

    முஸ்லிம் பெண்கள் தங்களின் முகங்களையும் முன் கைகயையும் தவிர ஏணைய பாகங்கள் அனைத்தையும் மறைத்து உடை அணிய வேண்டும் என்பது சன்மார்க்க விதியாகும்! -

    எம். ஜே. எம். ரியால்
    பொதுச் செயலாளர்
    ஜம்மிய்யத்துல் உலமா.



    மௌலவி ஜப்பானாக இருந்தாலும், இஸ்லாமிய சட்டம் இறைவனிடம் இருந்து வந்தது. கதை சொல்வதை விட்டு ஆதாரத்தை முன்வைக்கவும் .

    ReplyDelete
  8. சந்தேகப் பேர்வழிகள் பெண்களை மொத்தமாக மூடிவைக்க விரும்புகன்றனர்

    ReplyDelete
  9. இஸ்லாம் பெண்கள் விடயத்தில் என்ன குறிப்படுகிறது என்பதை,எமது நாட்டினுடைய சூழ்நிலைகளாேடு ஒப்பீடு செய்து முடிவெடுக்கப்படவேண்டும்.இங்கு முகத்தை மூடவேண்டும்என்றும்,மூடதேவையில்லை எனவும் இருகருத்துக்கள் நிலவுவதால் நாம் வாழும் நாட்டின் சூழ்நிலைகேற்ப முடிடெடுப்பதே
    சிறந்து..

    ReplyDelete

Powered by Blogger.