Header Ads



ஞான‌சார‌வை விடுவிக்க 400 இந்துக்கோயில்க‌ள் க‌டித‌ம் அனுப்பிய‌மை, முஸ்லிம்க‌ளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும்

ஞான‌சார‌வை விடுவிக்கும்ப‌டி 400 இந்துக்கோயில்க‌ள் க‌டித‌ம் அனுப்பியுள்ள‌மை நாட்டின் போக்கில் ப‌ல‌ மாற்ற‌ம் ஏற்ப‌ட்டு வ‌ருவ‌தை காட்டுகிற‌து. இந்ந‌ட‌வ‌டிக்கை முஸ்லிம்க‌ளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும்.

ஞான‌சார‌ என்ப‌வ‌ர் 2009 வ‌ரை த‌மிழ் போராட்ட‌த்துக்கு எதிராக‌ இருந்த‌வ‌ர். புலிக‌ளை க‌டுமையாக‌ சாடிய‌வ‌ர். 2009ம் ஆண்டு உல‌மா க‌ட்சியும் ஞான‌சார‌வும் சேர்ந்து கொழும்பு விஹார‌ம‌ஹாதேவி பூங்காவில் புலிக‌ளுக்கெதிராக‌  மிக‌ப்பெரிய‌ ஆர்ப்பாட்ட‌த்தை மேற்கொண்ட‌ன‌ர். இதுவே புலிக‌ளுக்கெதிராக‌ கொழும்பில் ந‌ட‌ந்த‌ இறுதி ஆர்ப்பாட்ட‌மாகும்.

இவ்வாறு த‌மிழீழ‌ போராட்ட‌த்துக்கெதிராக‌ க‌ள‌த்தில் நின்ற‌ ஞான‌சார‌வுக்கு ஆத‌ர‌வாக‌ இந்துக்கோயில்க‌ள் க‌டித‌ம் எழுதியுள்ள‌ன‌ என்றால் அத‌னை மிக‌ இல‌குவாக‌ புற‌ந்த‌ள்ள‌ முடியாது. இந்த‌ நிலைக்கு இந்துக்கோயில்க‌ளை மாற்றிய‌மைத்த‌ ச‌க்தி எது?

முஸ்லிம்க‌ளை பொறுத்த‌வ‌ரை அவ‌ர்க‌ளுக்கு ஞான‌சார‌வை 2012ம் ஆண்டுக்கு பின்ன‌ரே தெரியும். ஹ‌லால் பிர‌ச்சினையில் அவ‌ர் ஹீரோ ஆனார். ப‌ல‌ சிங்க‌ள‌ இளைஞ‌ர் ம‌த்தியில் இன‌வாத‌ம் பெருக‌ கார‌ண‌மானார். இத‌ன் கார‌ண‌மாக‌ முஸ்லிம்க‌ள் மிக‌ க‌டுமையாக‌ அவ‌ரை வெறுத்த‌ன‌ர் என்ப‌து உண்மை. இன்ன‌மும் கூட‌ முஸ்லிம்க‌ள் ஞான‌சார‌வுட‌ன் நெருங்குவ‌த‌ற்கு கொஞ்ச‌மும் விருப்ப‌ம் இல்லாத‌ நிலையில் வ‌ர‌லாற்றில் நேருக்கு நேர் ஆயுத‌ம் தூக்கி ச‌ண்டையிட்ட‌, பௌத்த‌ குருமாரையும் கொலை செய்த‌ த‌மிழ் போராளிக‌ளை பிர‌திநிதித்துவ‌ ப‌டுத்தும் இந்துக்கோயில்க‌ள் ஞான‌சார‌வுக்கு ஆத‌ர‌வாக‌ க‌ள‌த்தில் குதித்துள்ள‌ன‌ என்றால் என்ன‌ கார‌ண‌ம்?

இந்துக்கோயில்க‌ளின் இந்த‌ ந‌ட‌வ‌டிக்கையை த‌மிழ் ம‌க்க‌ள் ப‌ர‌வ‌லாக‌ எதிர்க்க‌வுமில்லை. 
என்ன‌ கார‌ண‌ம்?

ஞான‌சார‌ மூல‌ம் த‌ம‌து உரிமைக‌ளை வெல்ல‌லாம் என‌ த‌மிழ் ம‌க்க‌ள் நினைக்கின்றார்க‌ளா? 

அல்ல‌து எதிரிக்கு எதிரி ந‌ண்ப‌ன் என்ப‌தால் ஞான‌சார‌ முஸ்லிம் விரோத‌ப்போக்குடைய‌வ‌ர் என்ப‌தால் வ‌ட‌க்கு கிழ‌க்கு த‌மிழ் ம‌க்க‌ள் முஸ்லிம்க‌ளுக்கு எதிரான‌ சிந்த‌னை கொண்ட‌வ‌ர்க‌ள் என்ப‌தால் அவ‌ரை ந‌ண்ப‌ர் ஆக்கிக்கொண்ட‌ன‌ரா?
அல்ல‌து ஞான‌சார‌வுக்கு ஆத‌ர‌வு த‌ரும்ப‌டி புல‌ம் பெய‌ர் த‌மிழ் அமைப்புக்க‌ள் வேண்டிக்கொண்ட‌ன‌வா?

இந்த‌க்கேள்விகளுக்கான‌ விடைக‌ளை தேடுவ‌து இன்றைய‌ அவ‌சிய‌ தேவையாகும்.

இந்துக்கோயில்க‌ளின் பிர‌திநிதிக‌ளான‌ த‌மிழ் போராளிக‌ளை எதிர்த்த‌ ஒருவ‌ருக்கு இந்துக்கோயில்க‌ள் ஆத‌ர‌வு தெரிவிப்ப‌து இலேசுப்ப‌ட்ட‌ விட‌ய‌ம‌ல்ல‌. இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் குறிப்பாக‌ தென்னில‌ங்கை முஸ்லிம்க‌ள் ஆராய‌ வேண்டும்.

ஒரு த‌னிந‌ப‌ர் மீது கொண்ட‌ வெறுப்பு ஒரு ச‌மூக‌த்தின் மீது வெறுப்பை ஏற்ப‌டுத்த‌க்கூடாது. ந‌ம‌து ந‌ல்ல‌ செய‌ல்க‌ளால் ஞான‌சார‌ போன்றோரையும் வெல்ல‌லாம் என்ற‌ இஸ்லாமிய‌ வ‌ழிகாட்ட‌ல் ப‌ற்றியும் சிந்திக்க‌ வேண்டிய‌ த‌ருண‌ம் ஏற்ப‌ட்டுள்ள‌து என்ப‌தை இந்துக்கோயில்க‌ளின் ஞானசார‌ ஆத‌ர‌வு ந‌ம‌க்கு காட்டுகிற‌து.
- முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

7 comments:

  1. எதற்காக, யாருக்காக இந்த அரசியலின் மறுபக்கசாக்கடையில் குளிக்க உலமா என்ற
    அரபு நாமத்தை உங்கள் கட்சிக்கு சூட்டி இஸ்லாத்திற்கு கழங்கமாக இருக்கின்றீர்கள்
    என்பது சற்று புலப்படுகின்றது.மற்வர்களுக்கு
    முன்மாதிரியாய் இருக்கவேண்டிய மார்க்கதை
    சுமந்த நீங்கள் அவர்களின் முன்மாதியை பின்பற்ற தூண்டுவது விந்தையானது.முதலில்
    உங்களிடம் எங்கே அந்த முன்மாதிரிகள்,நீங்கெல்லாம் தனியே ஒரு இனத்துக்காக மதத்துக்காக குரல்ொடுப்பவர்கள்,பாடுபவர்கள் அல்ல மாறாக எல்லா மக்களின் விடிவுக்காகவும்
    சுபீட்சத்திற்காகவும் குரல்காெடுப்பவர்கள் என்பதை
    மறந்து விடாதீர்கள்.ஞானசாரர் பற்றிய உங்கள்
    கருத்து வரவேற்கத்தக்கது.

    ReplyDelete
  2. இந்த நாட்டில் இந்துக்களும் கோயில்களும் அநியாயக்காரனுக்குத் துணைபோகிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக அந்த அநியாயத்தை யாரும் வேறொரு சமூகத்தின் மீது திணிக்கவோ அதுபற்றி போதிக்கவோ அவசியமில்லை. ஒரு சமூகத்தை அழித்து அதனைச் சேர்ந்தவர்களைக் கொன்றொழித்து, அவர்களின் பொருளாதாரத்தை அழித்த இன்னும் திரைமறைவில் தொடர்ந்தும் அழித்துக் கொண்டி்ருக்கும் அட்டூழியக்கார ர்களுக்கு முஸ்லிம்கள் துணை போகமாட்டார்கள்.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. மஜீத் நானா என்னதான் செல்றீங்க நீங்க 400 உடன் சேர்த்து 401 ஆக கையொப்பமிட செல்றோ.உங்களுக்கு முன்னாடியே.அவகள தெரியுமெனில் ஒவ்வொரு முறையும் பிரச்சினை வரும்போதும் போய் அந்த சேஃகுடன் கதைத்து நியாயம் கேட்டிருக்கலாமே.அதை விட்டுட்டு.சும்மா றீல் விடமா போங்க சார்.

    ReplyDelete
  5. Anusath.

    Ippediye irunge kadasivara, Nalla varuveenge. Ungude samuhatha onrakki munnera valiyapparunge. Nariyappidika pullivaila mattiruvinge. Ganasara vode ponge nalla ganam valarum.

    ReplyDelete
  6. அப்படியென்றால், நீங்கள் செய்த படுகொலைகள்(சிங்களவர்களையும், முஸ்லிம்களையும்).
    சிங்களவர்களை அதிகமாக அழித்தது அனுஷாத், அந்தோனியாரின் கூட்டணி தான்.

    ReplyDelete
  7. @anushanth அப்போ தீவிரவாதி பிரபாகரன் முஸ்லிம்கள் பேச்சை கேட்டு தான் ஈழம் கேட்டு தீவிரவாதம் செய்தானா? அப்போ ஏண்டா இன்னும் அந்த செத்துப்போன பரதேசியின் கொளகையை தூக்கிக்கொண்டு அலைகிறீர்கள்?

    ReplyDelete

Powered by Blogger.