எனக்கு பிடித்த ஒருவரே, பிரதமராக இருக்க முடியும் - ஜனாதிபதி மைத்திரி
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை பழை என நீதிமன்றம் தீரப்பு வழங்கினால் பெரும்பான்மையை கொண்டிருக்கும் தரப்பினருக்கு ஆட்சி அமைக்க அனுமதி வழங்குவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எனினும், எனக்கு பிடித்த ஒருவரே பிரதமராக இருக்க முடியும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
“மகிந்த ராஜபக்சவினால் எனக்கு ஒருவருக்கு மட்டுமே ஆபத்து. எனினும், ரணிலை பிரதமராக நியமித்தால் முழு நாட்டிற்குமே ஆபத்து. இலங்கையே காணாமல் போயிருக்கும்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் சபாநாயகருடன் பல தடவைகள் தொலைபேசி ஊடாகவும், நேரடியாகவும் கதைத்து பல பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடிந்தமை மகிழ்ச்சி.
இதனிடையே, அரசியல் அமைப்பின் படி ஜனாதிபதி ஒருவர் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் எந்தவொரு நேரத்திலும் ஜனாதிபதி தேர்தலை அறிவிக்க முடியும்.
எனினும், நான் மற்றவர்களின் செயற்பாடுகளுக்கு இணங்க தயாராக இல்லை. இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து இது வரையிலும் தீர்மானிக்கவில்லை.
அதுவொரு முற்போக்கான விடயமாகும். அது குறித்து இப்போது முடிவெடுக்க வேண்டிய அவசியமில்லை. கடந்த ஒருமாத காலமாக நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
நாட்டில் மணித்தியாலத்தை அடிப்படையாக கொண்டு அரசியல் நடைபெறுக்கின்றன. ஊடகவியலாளராகிய நீங்கள் பல செய்திகளை தெரிந்து வைத்திருப்பீர்கள்.
கடந்த ஐந்து வாரங்களாக இப்படித்தான் நடக்கின்றது. அடுத்த ஒருவருட காலப்பகுதியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அது குறித்து நாங்கள் எதுவும் கூறமுடியாது” என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
சிறுபிள்ளைத் தனமான பிடிவாதம்!
ReplyDelete