Header Ads



வட­மா­காண சபையின் பின்­ன­டை­வு­க­ளுக்கு, ரொட்­டித்­துண்­டு­களைக் காட்டி அற­நிலை மறந்த அவை­யினரே காரணம்

தற்போதைய தலைமைகள் போய், மாற்றுத் தலைமை உதித்தால் மீண்டும் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக களமிங்குவதற்கு சாத்தியும் உள்ளது எனத் தெரிவித்த வட மாகாண  முதலமைச்சர் விக்னேஸ்வரன்,

வட­மா­காண சபையின் ஒரு­சில பின்­ன­டை­வு­க­ளுக்கு அர­சியல் ரொட்­டித்­துண்­டு­களைக் காட்டி அற­நிலை மறந்த அவை­யினர் சிலரே காரணம். அவ்­வாறு இருந்தும் எமது செயற்­பா­டுகள் செவ்­வனே இருந்­தன என்றும் சுட்­டிக்­காட்­டினார்.

எதிர்­வரும் மாதம் 25 ஆம் திக­தி­யுடன் வட­மா­காண சபையின் முத­லா­வது ஆயுட்­காலம் நிறை­வுக்கு வர­வுள்ள நிலையில் அடுத்­த­கட்ட செயற்­பா­டுகள் குறித்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

மேலும் முத­ல­மைச்சர் பதவி முடி­வுக்கு வந்­ததும் தமிழ் மக்­கள் பேர­வையின் நட­வ­டிக்­கை­களில் கூடிய கவனம் செலுத்­துவேன். கட்­சி­க­ளிலும் பார்க்க  மக்­களை ஒன்­றி­ணைத்து எமது மக்­களின் தேவை­களை உல­கிற்கு எடுத்துக் கூற என்னால் முடிந்­த­வற்றை செய்வேன் என்று விக்­கி­னேஸ்­வரன் இதன்போது தெரி­வித்தார்.

1 comment:

  1. விக்கினேஸ்வரன் ஐயா அவர்களே,
    நீங்கள் நீதித்துறையில் இருந்து வந்ததால் எல்லாவற்றையும் நேர்மையான கண்ணோட்டத்தோடு பார்ப்பது தவறு. அரசியல் என்பது வேறு. அது ஒரு சாக்கடை. அந்த சாக்கடையில் ஊறிப்போனா சம்பந்தன், சுமந்திரன் அவர்களால் ராஜதந்திர ரீதியாக முனகர்த்த முடியும். நீங்கள் அரசியலில் இருந்து ஒதுங்கி ஒரு பொது புள்ளியில் சகல தமிழ் கட்சிகளையும் அமைப்புகளையும் இணங்க சேயும் செயட்பாட்டில் இறங்கினால் நல்லது. நேர்மையாக இருப்பவர்கள் அரசியலுக்கு லாயக்கு அற்றவர்கள். நீங்கள் கட்சிகளை தாண்டி ஓர் கொள்கை புரட்சியை முன்னெடுத்தீர்களானால் அதில் நூறு வீதம் வெற்றி பெறுவீர்கள்.

    ReplyDelete

Powered by Blogger.