Header Ads



மைத்திரியே, பொது வேட்பாளராகக் களமிறங்குவார்

2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலும் மைத்திரிபால சிறிசேனவே பொது வேட்பாளராகக் களமிறங்குவார் என்று அமைச்சர் விஜித் விஜிதமுனி சொஷ்யா தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“இலங்கையை கடன் சுமையிலிருந்தும், சர்வதேச அழுத்தங்களிலிருந்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே மீட்டெடுத்தார். அவர் ஜனாதிபதியாகியிருக்காவிட்டால் இந்நேரம் நிலைமை படுமோசமாகியிருக்கும்.

கடந்த ஆட்சியின் போது நாமல் என்னை மச்சான் என்று அழைத்தார். அந்தளவுக்கு குடும்ப ஆதிக்கம் கோலோச்சியிருந்தது. அன்று துள்ளிய நாமலால் இன்று ஆர்ப்பாட்டமொன்றைக்கூட முறையாக நடத்த முடியாதுள்ளது.

யார் என்ன சொன்னாலும் மைத்திரிபால சிறிசேனவே அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுவேட்பாளராகக் களமிறங்குவார்" என தெரிவித்தார்.

1 comment:

Powered by Blogger.