Header Ads



டுபாயில், இலங்கைப் பெண்களுக்கு அவமானம்

வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்லும் இலங்கையர்கள் பெரும் அவமானங்களுக்கு உள்ளாவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கைக்கு அதிகளவான அந்நிய செலாவணியை பெற்றுக்கொடுக்கும் நபர்களாக வெளிநாடுகளில் பணியாற்றும் பெண்களே உள்ளனர்.

இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாரிய சேவைகளை வழங்கும் வெளிநாட்டு பணி பெண்களுக்கு இலங்கையில் கௌரவம் கிடைப்பதில்லை.

இவ்வாறான நிலையில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்லும் செல்லும் பெண்களுக்கு வேறு ஆடை ஒன்று வழங்கப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது.

டுபாய் ஹீ அல் டூரா என்ற தொழில் நிறுவனம் ஒன்று இலங்கை பணியாளர்களுக்கு இவ்வாறு புதிய ஆடை ஒன்றை வழங்கியுள்ளது. இந்த பெண்கள் பணிப்பெண் என அடையாளப்படுத்துவதற்காக இவ்வாறு புதிய ஆடை வழங்கப்பட்டுள்ளது.

மஞ்சள் மற்றும் கறுப்பு நிறத்திலான ஆடைகள் குறித்த இலங்கை பணிப்பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள், பணிப்பெண்களாக செல்வோரை அவமானப்படுத்தும் நடவடிக்கையாக உள்ளதென சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.