பிறை பற்றிய ஆலோசனை சபை, இவ்வாரம் கூடுகிறது
பிறையைத் தீர்மானிக்கும் விடயம் தொடர்பில் கடந்த வாரம் நியமிக்கப்பட்ட ஏழு பேர் அடங்கிய ஆலோசனை சபை இவ்வாரம் தனது முதல் அமர்வினை நடத்தவுள்ளதாகவும் இவ் அமர்வின்போது ஆலோசனை சபையினால் மேலும் 15 பேர் பிறை விவகாரம் தொடர்பில் செயற்படுவதற்கு நியமிக்கப்படவுள்ளதாகவும் ஆலோசனை சபையின் உறுப்பினரும் வக்பு சபையின் தலைவருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம்.யாசீன்தெரிவித்தார்.
பிறை விவகாரம் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள ஆலோசனை சபையின் செயற்பாடுகள் தொடர்பில் வினவியபோதே ஆலோசனை சபையின் உறுப்பினர் எஸ்.எம்.எம்.யாசீன் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் இது தொடர்பில் விளக்கமளிக்கையில்; நியமிக்கப்படவுள்ள 15 பேரும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, கொழும்பு பெரிய பள்ளிவாசல், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் என்பனவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துவார். திணைக்களத்தின் சார்பில் நியமனம் பெறவுள்ள ஐவரும் திணைக்களத்துக்கு வெளியேயிருந்து நிபுணத்துவம் பெற்றோர் தெரிவு செய்யப்படுவார்கள்.
குறிப்பிட்ட 15 பேருக்கும் அவர்கள் பிறை தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் பற்றிய விளக்கங்களை ஆலோசனை சபை வழங்கவுள்ளது. பிறையைத் தீர்மானிக்கும் விடயத்தில் எவ்வாறு பிறையைத் தீர்மானிக்கும் குழு செயற்படும் என்பது தொடர்பில் மக்களுக்குத் தெளிவுகளும் வழங்கப்படவுள்ளன.
ஆலோசனைக்குழு தற்போதைய பிறைக்குழுவுடன் இணைக்கப்படவுள்ள 15 பேருக்கும் தொடர்ந்தும் ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருக்கும். பிறைக்குழுவை நிறுவனப்படுத்திக் கொண்டிருக்கும் என்றார்.
If there are problems on sighting of the moon even after forming this group then we should find out the culprits who create division in the community.
ReplyDelete