Header Ads



"ரமழான் தலைப் பிறை தொடர்பில், வதந்திகளை நம்ப வேண்டாம்"

ரமழான் தலைப்பிறை தொடர்பில் வெளியாகும் உத்தியோகப் பற்றற்ற எந்தவித தகவல்களையும் நம்ப வேண்டாம் என பிறைக் குழுத் தலைவர் அஷ்ஷெய்க் அப்துல் ஹமீது பஹ்ஜி தெரிவித்தார்.

இன்று (16) மாலை கொழும்பு பெரிய பள்ளிவாயலில் கூடிய ரமழான் தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாட்டிலிருந்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

தொலைபேசிகள், முகநுால் பக்கங்கள் ஊடாக பொய்யான செய்திகள் பரப்படலாம். மக்கள் அவற்றை நம்ப வேண்டாம். இன்று கொழும்பு பெரிய பள்ளிவாயலில் கூடிய உலமாக்கள் ஏகோபித்து நாளை நோன்பு இல்லையென்ற தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

இதன்படி, நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ரமழான் முதலாவது நோன்பு ஆரம்பமாகும் எனவும் அவர் மேலும் அறிவித்தார்.   

Dc

No comments

Powered by Blogger.