Header Ads



இந்து அடிப்­ப­டை­வா­தத்தின் பின் சென்றால், அமை­தி ஏற்­ப­டாது - தமி­ழர் பகு­தி­க­ளில் இன­ரீ­தி­யி­லான நிகழ்ச்சி நிர­ல்

அடிப்­ப­டை­வா­தி­களின் பின்னால் தமிழர் தரப்பு செல்­லு­மாயின் வடக்கு, கிழக்குப் பகு­தி­களில் நிலை­யான ஒற்­று­மையை உரு­வாக்­கு­வது வெறும் கன­வா­கவே மாறி­விடும் என கொழும்பு மாவட்ட ஐக்­கிய தேசியக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர்  முஜிபுர்  ரஹ்மான் தெரி­வித்தார்.

திரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா வித்­தி­யா­லய விவ­காரம் குறித்து ஊட­கங்­க­ளுக்கு வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­த­துள்ளார். அவர் மேலும் தெரி­விக்­கையில்,

பாட­சாலை ஆசி­ரி­யர்­க­ளுக்­கான ஆடை வரை­யறை குறித்த எந்­த­வித சுற்­று­நி­ரு­பமும் கிடை­யாது. ஆனால், ஒழுக்­க­மான ஆடை அணிய வேண்டும் என குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கி­றது. எனினும், நாட்டில் பொது­வாக ஆசி­ரி­யைகள் சேலை அணி­வதை சம்­பி­ர­தா­ய­மாகக் கொண்­டி­ருக்­கின்­றனர். 

இது இவ்­வா­றி­ருக்க, முஸ்லிம் ஆசி­ரி­யைகள் ஹபாயா எனும் முழு உட­லையும் மறைக்கும் வித­மான ஆடை­களை அணி­ப­வர்­க­ளாக பெரும்­பா­லான பகு­தி­களில் இருக்­கின்­றனர். இதற்கு சட்ட ரீதி­யான அங்­கீ­காரம் வழங்­கப்­பட வேண்டும். 

திரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா வித்­தி­யா­ல­யத்தில் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் ஹபாயா அணிந்து வந்­த­மைக்கு எதிர்ப்பு வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கி­றது. இந்த ஆடை இந்துக் கலா­சா­ரத்தில் ஒரு­போதும் தாக்கம் செலுத்தப் போவ­தில்லை என்­பதை விளங்­கிக்­கொள்ள வேண்டும். அத்­துடன் ஹபா­யாவை இந்து விரோ­த­மாகக் கொள்ளத் தேவை­யில்லை. 

நாட்டில் அண்­மைக்­கா­ல­மாக குறிப்­பிட்ட சில சிங்­களக் குழுக்கள் முஸ்­லிம்கள் மீது இன­வாத ரீதி­யி­லான பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்தி வந்­தனர். அதனை அர­சியல் கரு­வி­யா­கவும் பயன்­ப­டுத்தி வந்­தனர். தற்­போது தமி­ழர்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் பகு­தி­க­ளிலும் இவ்­வா­றான இன­ரீ­தி­யி­லான நிகழ்ச்சி நிர­லொன்று முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக சந்­தே­கிக்கத் தோன்­று­கின்­றது. 

சுய­நிர்­ணய போராட்­டத்தை மேற்­கொண்டு பல இழப்­பு­களை தமிழ் மக்கள் சந்­தித்­தி­ருக்­கின்­றனர். தமி­ழர்­களின் உரி­மை­க­ளுக்­காக அன்று நாம் வீதியில் இறங்கிக் குரல் கொடுத்தோம். இன்று மீண்­டு­மொரு அசா­தா­ரண நிலை­மையை உரு­வாக்க முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. இதன் விளைவை நன்கு உணர்ந்­துள்ள தமிழ் மக்கள் மற்­று­மொரு கசப்­பான சந்­தர்ப்­பத்தை நிச்­சயம் எதிர்ப்­பார்கள் என்றே கூற­வேண்டும்.

தமி­ழர்­க­ளுக்கு உரிமை வழங்­கப்­பட வேண்டும் என்­பதில் எவ்­வித மாற்றுக் கருத்தும் கிடை­யாது. இதற்கு முஸ்­லிம்­களின் ஒத்­து­ழைப்பு அத்­தி­யா­வ­சி­ய­மா­னது என்­பதைத் தமி­ழர்கள் நன்­க­றி­வார்கள். முஸ்­லிம்­களும் தமி­ழர்­களும் ஒன்­றி­ணைந்தால் இல­கு­வான தீர்வை பெற்­றுக்­கொள்­ளலாம். இவ்­வாறு முஸ்­லிம்­களும் தமி­ழர்­களும் ஒன்­று­ப­டு­வதை பேரி­ன­வாத சக்­திகள் விரும்­பு­வ­தில்லை. இந்­நி­லையில் சிங்­களப் பேரி­ன­வா­தி­களின் எதிர்­பார்ப்­புக்கு சாத­க­மா­ன­தொரு நிலை­மையை ஏற்­ப­டுத்திக் கொடுத்­து­வி­டக்­கூ­டாது. 

தமி­ழர்­களின் பிர­தே­சத்தில் வாழும் முஸ்­லிம்­களின் உரி­மை­க­ளுக்கு மதிப்­ப­ளிக்­கப்­பட வேண்டும். இதனால் இரு சாரா­ருக்­கு­மி­டையே நம்­பிக்கை பலப்­படும்.

அவ்­வா­றின்றி சிவ­சேனா போன்ற அமைப்­பு­க­ளு­ட­னான தொடர்­பு­களைக் கொண்­டி­ருப்போர், இந்து அடிப்­ப­டை­வா­தத்தின் பின்னால் சென்றால் வடக்­கிலும் கிழக்­கிலும் நிலை­யான அமை­தியை ஏற்­ப­டுத்த முடி­யாது போய்­விடும். இதற்குத் தமிழ் தலை­மைகள் ஒரு­போதும் துணை­போ­கக்­கூ­டாது. இலங்­கையில் இஸ்­லா­மி­யர்­க­ளி­டையே அடிப்படைவாதம் கிடையாது. அவ்வாறு அடிப்படைவாதம் உருவெடுக்க நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். எனவே, வடக்கிலும் கிழக்கிலும் தலைதூக்கும் அடிப்படைவாதிகளை கட்டுப்படுத்த தமிழ் அரசியல் தலைமைகள் முன்வர வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் இதற்கு நியாயமான தீர்வை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் எனவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

-Vidivelli

8 comments:

  1. மகிந்த வின் free பிரியாணிக்கும் சாரயத்திற்கும் ஆசைப்பட்டு, முஸ்லிம்கள் தமிழ்ர் ஆதரவு ஜெனிவா தீர்மானத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ததை ரகுமான் சாரு மறந்துவிட்டார் போலும், பாவம்.

    ReplyDelete
  2. ஹிந்து பயங்கரவாதம் இலங்கையில் வளர்த்துக்கொண்டு வரும் நிலையில் அகண்ட பாரதம் எனும் கோட்பாட்டில் இந்திய நாய்கள் இலங்கையை விழுங்க பல ஹிந்து தீவிரவாதிகளை இலங்கையில் களமிறக்கியிருப்பதை சிங்கள மக்களிடம் தெளிவாகவும் பின்னாட்களில் ஹிந்து பயங்கரவாதிகளால் அகண்ட பாரத கோட்பாடு பற்றியும், அதனால் இலங்கை சிங்கள ஆட்சிக்கு காத்திருக்கும் ஆபத்து பற்றியும் சிங்களவர்களை தெளிவடைய செய்ய முஜிபுர் ரகுமான் முயற்சி செய்ய வேண்டும்

    ReplyDelete
  3. @Gtx,
    இனி இந்த மூட்டி விடுறது கோத்து விடுறது எல்லாம் கடினம். முடிந்தால் 2009ம் ஆண்டுக்கு முன் முயட்சித்து பார்த்திருக்கலாம். சிங்களவர்களின் தெளிவுத்தன்மையே கண்டி திகன புரட்சி என்று கூறியாகவேண்டும். இனியும் அகண்ட பாரதம் என சப்பை கட்டு கட்டினால் பாகிஸ்தான் நிச்சயம். கப்பலேறி போயாச்சு சுத்தமான ஊராச்சு பாகிஸ்தான் என கப்பலேற்றப்படுவது நிச்சயம். இதையே நாங்கள் தெளிவு படுத்தினால் உங்களுக்கு தீர்க்கதரிசி ஞானசரதேரர் அவர்கள் சொன்னது போல மீண்டும் எழும்பி நிற்க முடியாத அளவுக்கு தான் இருக்கும்.

    ReplyDelete
  4. anusath உலக அரசியலும் சிங்களவனிடம் 50 வருடங்களாக அடிவாங்கியும் அவன் இயல்பையும் அவன் தந்திரத்தை புரிந்துகொள்ளமுடியாத மடையர்கள் தான் ஈழ தமிழ் பயங்கரவாதிகள். மித மிஞ்சிய கட்பனை, தங்களை தவிர மற்றவர்களெல்லாம் முட்டாள்கள் என்று எண்ணி தான் பிரபாகரனும் அவன் புலி கூட்டமும் உரு தெரியாமல் அழிந்து உன் சமுதாயத்தையே அழித்தது. உண்மையில் சிங்களவர்களுக்கு முஸ்லிம்கள் மேல் எந்த விட பயமும் இல்லை. அவர்களுடைய அற்ப அரசியல் தேவைக்கும் அவர்கள் பயப்படும் ஈழ சிந்தனையை ஒடுக்கவுமே தான் முஸ்லிம்கள் மீது இனவாதத்தை திருப்பினார்கள். காரணம் நாங்கள் அழிந்து நாசாமாகிவிட்டோம் சோனி அழிய மாட்டானா என்று நாக்கை தொங்கவிட்டு நாயை போல் காத்திருந்த அற்ப தமிழ் பயங்கரவாதிகளை முஸ்லிம்களுக்கு எதிராக முழுமையாக திருப்பி ஈழ சிந்தனையை மளுக்கடிப்பதே நோக்கம். சிங்கள கத்தி மீண்டும் ஒருமுறை உங்கள் பக்கம் சில வருடங்கள் கழித்து திரும்பும் அதுவரை சோனி பாகிஸ்தான் போகவும் மாட்டான் உங்களை போல் அடி வாங்கி சாகவும் மாட்டான் இதே இலங்கையிலிருந்து பார்க்க தான் போகிறீர்கள்.

    ReplyDelete
  5. இந்துப் பயங்கரவாதம் இலங்கையில் 'சடுகுடு' விளையாட்டு விளையாடுவதை இலங்கை மக்கள், பாகிஸ்தானின் ஊடாக இலங்கை அரசிற்கு தெரிவித்து, அதை முற்றாக அழிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

    ReplyDelete
  6. Gt x, very well said. Anusath's day dream will always remain the day dream.

    ReplyDelete
  7. @sampanthan tna, கனவு காணதீர்கள்.
    பாக்கிஸ்தான் ஒரு டம்பா நாடு. அமேரிக்காவிற்கு பயந்த நாடு. நாட்டில் எங்க எப்ப குண்டு வெடிக்கும் என யாருக்கும் தெரியாது. பயத்தில் ஒருவரும் அங்கு போவதில்லை.
    கண்டி கலவரத்தின் போது கூட ஏன் என கேட்கவில்லை.

    ReplyDelete

Powered by Blogger.