Header Ads



ஷண்முகா இந்துக் கல்லூரிக்கு எதிராக, அடிப்படை உரிமை மீறல் வழக்கு


திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரியில் சென்ற வாரம் 5 முஸ்லீம் ஆசிரியைகள் தங்களின் கலாச்சார ஆடைகளை அணிந்து பாடசாலை செல்வதற்கு அதிபராலும் பாடசாலை நிர்வாகத்தினராலும் தடைவிதிக்கப்பட்டதையும் அதனைத் தொடர்ந்து கல்லூரிக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதும் அனைவரும் அறிந்ததே.

அதனைத் தொடர்ந்து வெளிப்படையாக தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்ட ஆசிரியைகளைச் சந்திப்பதற்காகவும், துல்லியமான தகவல்களைத் திரட்டுவதற்காகவும் குரல்கள் இயக்கம் நேற்று திருகோணமலைக்கு விஜயம் செய்தது.

குரல்கள் இயக்கத்தின் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சகோதரர் சப்ரி, சட்டத்தரணிகளான முஹைமின் காலித், ருஷ்தி ஹஸன், கமால் ஆகியோர் குரல்கள் இயக்கம் சார்பாக திருகோணமலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

பாதிக்கப்பட்ட ஆசிரியைகள் அவர்களின் கணவர் மார்களைச் சந்தித்து நடந்தேறிய சபவங்களின் முழுத்தகவல்களையும் பெற்றுக் கொண்டதோடு அடுத்த கட்ட நகர்வுகளுக்கான ஆலோசனைகளையும் குரல்கள் இயக்கம் வழங்கியது.

ஷண்முகா இந்துக் கல்லூரிக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தல், சம்பவம் தொடர்பான முறைப்டாடொன்றை மனித உரிமை ஆணையகத்திற்கு சமர்ப்பித்தல், குறிப்பிட்ட ஆசிரியைகளின் கணவர்கள் பாடசாலை அதிபரை மிரட்டியதாக பரப்பட்ட பொய்ப் பிரச்சாரத்திற்கு செய்தித்தளங்களுக்கு எதிராக மான நஷ்ட வழக்குத் தாக்கல் செய்தல், இனவாதத்தை தூண்டும் வகையில் முக நூல்களிலும் குறிப்பிட்ட ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்தல் போன்ற பல விடயங்கள் கலந்துரையாடபபட்டன.

ஆசிரியைகள், அவர்களது கணவன்மாரும் ஒத்துழைப்புத்தருவதாகவும் உறுதியளித்தனர்.

14 comments:

  1. I think that mutual understanding is important on this .. This issue should be resolved so quickly and so pomply . No need to go to court and police. Tamil and Muslim leaders should sort out this now.. there is politics behind this .. It is not good at all. Can we ask to Tamils to do circumcision to come Muslim schools or Tamil teachers to wear Muslim uniform to come to Muslim schools no. We can not do that .. In the same way, they should let us wear our cloth in Tamil and Sinhalese schools.

    ReplyDelete
  2. Great, great, May Allah bless all of you, inshaallah Justice will win. Racist will shut their mouth and back.

    ReplyDelete
  3. THE MUSLIM TEACHERS SHOULD CARRY OUT ANY TRANSFER ORDER RECEIVED IN THE LEGAL MANNER AND ACCORDINGLY REPORT FOR WORK AT THEIR NEW SCHOOLS. HOWEVER, THIS MATTER SHOULD NOT GO UNCHALLENGED, THE ONLY WAY IS TO FILE ACTION IN A COURT OF LAW AND SEEK REDRESS ONCE AND FOR ALL.

    ReplyDelete
  4. தாமதமின்றி சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு இதன் வழக்கு தீர்ப்பை சகல பாடசாலைகளுக்கும் அனுபவம்

    ReplyDelete
  5. This issue not only faced by sanmuha Muslim teachers. An official statement/ circular will be the long lasting solution for this issue. Many non Muslim schools forcing Muslim teachers to wear saree all over the island.

    ReplyDelete
  6. தமிழர்களின் நிலம் இஸ்லாமிய மத மாற்றம் பொருளாதாரம் இறுதியில் கல்வியிலும் கை வைத்து விட்டார்கள் இந்த கயவர்கள். இனியும் தமிழ் பேசும் சமூகம் தானே அனுசரித்து செல்லுங்கள் என எவனாவது கூறட்டும் அவன் தான் எங்கள் முதல் எதிரி. திருகோணமலையில் தமிழ் பெண்களுக்கென இருக்கும் ஒரே ஒரு பாடசாலையையும் முடக்குவதட்கான சகலநடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதன் தாற்பரியத்தை நோக்க வேண்டி உள்ளது. இந்த ஒரே ஒரு பெண் பாடசாலையை முடக்குவதனால் முஸ்லிம்கள் அடையப்போகும் நன்மை. இப்பள்ளியிலிருந்து கிழக்கு பல்கலைக்கழகத்திக்கு தெரிவு செய்யப்படும் தமிழர்களின் எண்ணிக்கையை குறைத்தல். முஸ்லிம்களின் அடாவடியை இலங்கை முழுவதும் உள்ள தமிழர் பாடசாலைகளில் அரங்கேற்றல் என வெளிநாட்டு முஸ்லீம் அடிப்படை வாதிகளின் நிகழ்ச்சி நிரலிட்கு அத்திவாரம் போடப்பட்டுவிட்டது. இந்த அதிபர் சுமார் பாத்து ஆண்டுகளுக்கு மேலாக இக்கல்லூரிக்கு சேயும் தொண்டு அளப்பரியது. பலக்லைக்கழகம் செல்லும் மாணவிகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்காகி காட்டியுள்ளார். அவருடைய தொண்டை நான் நேற்று தான் ஒரு பத்திரிகை வாயிலாக படித்தேன். இவருக்கு இடமாற்றம் கிடைத்தால் நிச்சயம் அது தமிழர்களின் கல்விக்கு கிடைத்த தர்ம அடி. இதனை தடுக்க தமிழராய் ஒன்றிணைவோம். தேவைப்படின் இப்பாடசாலையை தனியார் பாடசாலையாக மாற்றுவோம்.

    ReplyDelete
  7. தற் பொழுது நான் அறிந்த விடயம் யாதெனில் (london ல் இருந்து திருகோணமலை சென்றுள்ள எனது நன்பன் தொலைபேசி வழியாக) அப்பாடசாலைக்கு கல்விகற்பிப்பதற்கு வந்த ஆசிரியர் தலையில் இருந்து கால்வரை மூடிக்கொண்டு செளதிஅரேபியா பெண்கள் போல் அம்மாணவர்களுக்கு மாறுபட்ட சூழ்நிலை குளப்பமான மனநிலை காணப்பட்டதாகவும் தமிழ் மக்கள் பயன் படுத்தும் சொற்களுக்கு எதிராண சொற்களை அதாவது அம்மா அப்பா என்பதுக்கு பதிலாக வாப்பா உம்மா என்றும் திரும் வா எனும் சொல்லிற்குப்பதிலாக கிறுக்கிவா என கூறியதை மாணவர்கள் புரிந்து கொள்ளமுடியாது பேப்பரில் கிறுக்கு வைத்துள்ளார்கள் அங்கு கல்வி கற்கும் மாணவர்களுக்கே அசைவ உணவு உட்கொள்ள உள்ளே அனுமதி இல்லாத கட்டுக்கோப்பாண நிர்வாகம் என அறியத்தந்தார்

    ReplyDelete
  8. Find a solution through court of Law.

    ReplyDelete
  9. சந்திரபால், அன்டனி போன்றோருக்கு சிறு மூளை நடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுகபோகங்களுக்காக சைவ சமயத்தையும் இலங்கையையும் காட்டிக்கொடுப்பதற்காக மதம் மாறிய கூட்டத்தைச்சேர்ந்தவர்கள்என்பது தோலுரிக்கப்படும் என்பதும் கல்வியிலும் பரீட்சை வ்வினாத்தாள் மோசடி, வேட்டி விவகாரங்கள் எல்லாம் வெளிச்சம் போட்டுக்காட்டப்பட்டு விடுமோ என்ற பயமும் இழையோடியிருப்பதுபோல் தெரிகிறது. தீர்ப்பு வரும்போது உனது தலை வெடித்துச் சிதறிவிடும். பள்ளிப்படிக்கட்டுக்காக தாயையும் விற்றிருப்பீர். மாற்றான் விடயத்தில் மூக்கை நுழைக்கும் உனது படிப்பின் தரம் இதனைக்கோடிட்டுக் காட்டுகின்றது.

    ReplyDelete
  10. Mohamed Lafir - Do not think decision will come on the favour of Muslims.

    Even the court will change anything from political arena.

    ReplyDelete
  11. Excellent effort by voice movement

    ReplyDelete
  12. நீ நான் கட்டிய வீட்டிற்குள் வர வேண்டுமானால் வாசலில் நெருப்பை களட்டி விட்டு வா என்கிறேன் நீயோ செருப்போடுதான் வருவேன் என்கிறாய்

    ReplyDelete
  13. அது உண் சொந்தச் செலவில் கட்டியிருந்நால் சரி இது முழு மக்களின் வரியில் இருந்து கட்டியது ஆகவே உரிமை சமமானது சட்டப்படி சென்றால் ஏன் இவ்வளவு குத்துது? ஏன் உங்களைப் போல் வீதியில் இறங்கி கூச்சலிட அல்லது ஆயுதம் தாங்கி அப்பாவிகளைக் கொல் வேண்டும் என்று நினைத்தீர்களோ?

    ReplyDelete

Powered by Blogger.