முஸ்லிம்களை தாக்கிய 2 இராணுவத்தினர் உள்ளிட்ட 10 பேர் கைது
குடுகல பகுதியில் இன்று (15) ஞாயிற்றுக்கிழமை ஆட்டோவில் சென்று கொண்டிருந்த முஸ்லிம் இளைஞர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 2 இராணுவத்தினரும் உள்ளடங்குவதாக அறியவந்துள்ளது.
பொலிஸார் துரிதமாக செயற்பட்டதனாலேயே, இந்த வன்முறையுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முஸ்லிம் இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒருவர், பொலிசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே ஏனையவர்கள் கைது செய்யப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இது எப்போது நடந்தது?
ReplyDelete