வன்முறையாளர்களுடன் சமரசத்திற்கு இடமில்லை - சட்டத்தின் முன் நிறுத்துங்கள்
வன்முறையாளர்களுடனோ அல்லது பள்ளிவாசலுக்கு சேதம் விளைவித்தவர்களுடனோ சமரசத்திற்கு செல்வதை தாமும் எதிர்ப்பதாக பிரதியமைச்சர் ஹரீஸ் கூறினார்.
பொலிசார், பௌத்த மதகுருமார் என சிலர் வன்முறையாளர்களை விடுவிக்கும் நோக்குடன் சமரசத்திற்கு முயற்சிப்பதாகவும், பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு அழுத்தம் வழங்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டிய ஹரீஸ், எனினும் தாம் இதற்கு உடன்படவில்லை எனவும் எதிர்வரும் சனிக்கிழமை பிரதமர் அம்பாறைக்கு வரும்வரை தாம் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அல்லாஹ்வை அஞ்சாத நிர்வாகிகள் மஷ்ஜிதுகளை நிர்வகிப்பதால் தான் மனிதர்களுக்கு பயந்து, கொள்கையை மறந்து,மஹ்சறை மறந்து செயல்பட நினைக்கிறார்கள்
ReplyDelete