'ஜும்ஆத் தொழுகைக்கு செல்வதை, கட்டுப்படுத்துவதை ரத்து செய்'
முஸ்லிம் அரச ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் ஜும் ஆத் தொழுகைக்கு செல்வது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றுநிருபம் உடனடியாக இரத்து செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
இலங்கையின் ஒவ்வொரு பிரஜையினதும் மத சுதந்திரம் என்பது அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இது அரசியலமைப்பின் 14 ஆம் அத்தியாயம் 1 (2) பிரிவிலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிறுவனத் தலைவர்களின் தீர்மானத்திற்கமைவாக நிறுவன செயற்பாடுகளுக்கு தடை ஏற்படாத வகையில் முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆத் தொழுகையை நிறைவேற்றுவதற்காக இரண்டு மணி நேர விசேட விடுமுறை வழங்கப்படலாம் என பொது நிர்வாக அமைச்சின் 21/2016 ஆம் இலக்க சுற்றுநிருபம் மூலம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை இந்த சுற்றுநிருபம் தாபனக் கோவையின் Xii ஆம் அத்தியாயம் 12:1 க்கு திருத்தமாக சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை அண்மையில் அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
இந்நடவடிக்கையானது முற்றுமுழுதாக இலங்கை அரசியலமைப்பின் அடிப்படை உரிமையை மீறும் செயல் என்பதுடன் அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மத சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாக அமைந்துள்ளது.
எனவே முஸ்லிம் அரச ஊழியர்களின் அடிப்படை உரிமையை மீறும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த சுற்றுநிருபத்தை உடனடியாக வாபஸ் பெற்று, முஸ்லிம் ஊழியர்களுக்கு பாதிப்பில்லாத வகையில் புதிய சுற்றுநிருபம் ஒன்றை வெளியிடுமாறு கோரிக்கை விடுக்கின்றோம். இல்லையேல் நீதிமன்றம் சென்று அதனை சவாலுக் குட்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்
Will he listen???
ReplyDeleteHe is busy to get the post of wise president of WHO...!!!
அரசியலமைப்பின் சர்த்துகளுக்கு இயைபாக தாபனக் கோவை தயார் செய்யப்படுவதுதான் வழக்கம். இங்கு சுற்றுநிருபத்தின் வசனங்கள் ஒருவரின் மதச்சுதந்திரத்துக்கு தடையாக அமைகிறதா அல்லது இந்த வகையான சுற்றுநிருபங்கள் அடிப்படையில் ஒருவரின் மதச்சுதந்திரத்துக்குச் சவாலாக அமைந்துள்ளதா என்பதை மனித உரிமை விவகாரங்களில் கைதேர்ந்த சட்டத்தரணிகளின் ஆலோசனை,தீர்மானங்களின் அடிப்படையில் இவ்வாறான விடயங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.அதற்கு மாறாக புத்தள பா.உ. ரங்கே பண்டார பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர இருப்பதாக பகிரங்கமாகத் தெரிவித்தது ஐ.தே.க.கட்சியின் சட்டதிட்டங்களுக்கு முரணானது என்பதை அவர் தெரியாமல் சத்தமிட்டு சீரழிவது போன்று நடக்காமல் முஸ்லிம் சமூகத்தின் அடிப்படை உரிமைகள் பற்றி நாம் பகிரங்கமாக சவால்விடும்போது அவற்றுக்கு உரிய அடிப்படைச் சட்டங்களுக்கு ஏற்றவகையில் அமைந்தால் அது சமூகத்தின் இருப்புக்குச் சாதகமாக இருக்கும்.அல்லாவிட்டால் எமது முயற்சி இனவாதிகளின் வாய்க்கு சக்கரை போட்டதுபோல் இருக்கும்.
ReplyDeleteAgree
ReplyDelete