2020 இல் முஸ்லிம் காங்கிரசை, ஹக்கீம் கலைத்து விடுவார் - அமீர் அலி
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்த அடிப்படை போராளிகள் எல்லோருமே அக்கட்சியில் இருந்து வெளியேறிவிட்டார்கள். அக்கட்சியில் மீதமாக இருந்தவர்களும் தற்போது இரட்டைக் கொடியில் போட்டியிடுகின்றனர் என்று பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் தெரிவித்துள்ளார்.
ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று பிரதேச சபைகளுக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மீறாவோடையில் நேற்று இரவு இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில்கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் போராளிகள் என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்கள் பொறுத்திருந்து பாருங்கள். சரத் பொன்சேகா அவரது கட்சியை கலைத்து விட்டு ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொண்டது போல், 2020ஆம் ஆண்டளவில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை கலைத்து விட்டு கண்டி கலகெதுர பிரதேசத்தின் ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் பதவியை பெற்றுக் கொண்டு கட்சியை முழுமையாக இல்லாமல் செய்து விடுவார் என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
இந்த தேர்தலிலே உங்களது வட்டாரத்தின் தலைவர்களை நீங்களே தெரிவு செய்து கொள்ள வேண்டும்.
மனிதர்கள் ஒவ்வொருவரும் பிழை செய்யாதவர்கள் இல்லை. நூறு வீதம் நான் சரியானவன் என்றோ எங்கள் கட்சியின் தலைவர் நூறு வீதம் சரியானவர் என்றோ நான் கூறுவதற்கு தயாரில்லை. இருப்பவர்களுக்குள் நல்லவர்கள் யார் என்பதை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள் எனத் தெரிவித்தார்.
Appo neenga happya iruppingalo...?
ReplyDeleteIlla Yaanayil earuveergala...? illa Kaiyyodu sangamippeergala...?
Because Maram neenda naal vaalum but mayil at least 24hrs aada mudiyuma...? Joker..of the Batticaloe