Header Ads



சகோதரியை தூக்கிக் கொண்டு, வீதியைக் கடந்த 13 வய­து சிறுமி விபத்தில் பலி

(ரெ.கிறிஷ்­ணகாந்)

கண்டி யாழ்ப்­பாணம் வீதியில், நாவுல – நாலந்த வைத்­தி­ய­சா­லைக்கு அருகில் கார் ஒன்­றினால் மோதப்­பட்டு 13 வயது சிறுமி ஒருவர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

நேற்று முன்­தினம் மாலை தனது தாயுடன் வீதியில் சென்று சென்று கொண்­டி­ருந்த வேளையில், இச்­சி­றுமி தனது ஒன்­றரை வய­தான சகோ­த­ரியை தூக்­கிக்­கொண்டு வீதியை கடக்க முற்­பட்­ட­போது இந்த விபத்து இடம்­பெற்­றுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வி­பத்தில் நாலந்த பிர­தே­சத்தைச் சேர்ந்த கௌசல்யா செவ்­வந்தி (13) என்ற சிறுமி உயி­ரி­ழந்­துள்ள அதே­வேளை, எலிசா தரு­தனி என்ற ஒன்­றரை வய­தான, அச்­சி­று­மியின் சகோ­தரி காய­ம­டைந்த நிலையில் மாத்­தளை ஆதார வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

சம்­பவம் தொடர்பில் நேரில் கண்­ட­வர்கள் தெரி­விக்­கையில், இச்­சி­றுமி தனது தாயின் சொல்லைக் கேட்­காது வீதியைக் கடக்க முற்­பட்ட வேளையில் இவ்­வாறு விபத்துக் குள்­ளா­கி­ய­தாக தெரி­வித்­துள்­ளனர்.

அவ­தா­ன­மற்ற முறையில் குறித்த சிறுமி, குழந்­தை­யுடன் வீதியை கடக்க முற்­பட்ட வேளையில் மாத்­த­ளை­யி­லி­ருந்து தம்­புள்ளை நோக்கி பய­ணித்த கார் ஒன்­றினால், மோதுண்­டுள்ளார். அதன்­போது காரின் தடுப்புத் தொகுதி செயற்­ப­டுத்­தப்­பட்ட போதிலும், சுமார் 20 மீற்­ற­ருக்கு அப்பால் சென்று அக்கார் நிறுத்­தப்­பட்­ட­தா­கவும், அவ்­வே­ளையில் விபத்­துக்­குள்­ளான சிறு­மியின் கையி­லி­ருந்த குழந்தை தூக்­கி­யெ­றி­யப்­பட்­ட­தா­கவும் மேலும் தெரி­வித்­தனர்.

சம்­பவம் தொடர்பில் காரின் சாரதி கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும், அவர் சீகி­ரி­யாவை சேர்ந்­தவர் என்றும் பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். காரில் கண்­டிக்கு வாடகைப் பய­ண­மொன்றை மேற்­கொண்டு மீண்டும் சீகி­ரியா நோக்கித் திரும்­பிக்­கொண்­டி­ருந்த போதே இந்த விபத்து ஏற்­பட்­டுள்­ள­தாக ஆரம்­பக்­கட்ட விசா­ர­ணை­களில் தெரிய வந்­துள்­ளது.

சம்­பவம் தொடர்பில், நாவுல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் சுகத் பண்டார விஜேசுந்தரவின் உத்தரவுக்கமைய நாவுல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.