பௌத்தர்களுக்கு எதிராக ஜிஹாத் (மியன்மாரில் ஞானசாரர் குழு கண்டதும், கேட்டதும்)
சிங்களத்தில்: சதுர பமுனுவ, தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார்
ரேருகானே சந்தவிமல தேரர் இலங்கை ‘ஷ்வேஜின் நிகாய’ என்ற பௌத்த பிரிவின் தலைமைப் பதவி வகித்த பெருந்தகை. அவர் பத்து ரூபா கப்பல் பிரயாணக் கட்டணத்தில் பர்மா நாட்டுக்கு பயணித்த சம்பவம் அவரது வாழ்க்கை வரலாற்றில் காணப்படுகிறது. இலங்கைக்கும் பர்மாவுக்கும் மிகவும் நெருக்கமான பௌத்த உறவு இருந்து வருகிறது.
மிகவும் விலைமதிக்கத்தக்க சூடாமாணிக்கம் என்ற வைர இரத்தினம் பர்மிய பௌத்த மக்களாலே இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. விலைமதிக்கவே முடியாத சூடா மாணிக்க வைரம் இலங்கையில் எந்த பிரசித்திபெற்ற பௌத்த தலங்களிலும் காண்பதற்கில்லை.வெளிநாட்டு மன்னரொருவரால் இத்தகைய அரும் பொக்கிஷம் ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்ட வரலாறும் இல்லை.
இத்தகைய பெறுமதி வாய்ந்த பொருள் ஒன்று எம்மை அடைய பிரதான காரண கர்த்தாவக இருந்தவர் வினயாலங்கார தேரர் என்பதை நாம் மறந்து விடுவதற்கில்லை. ரேருகானே சந்தவிமல தேரரால் எழுதப்பட்ட ‘சூடாமாணிக்க வைரத்தின் மகிமையும் வினயாலங்கார தேரரின் மதிப்பும்’ என்ற நூலில் இவ் வைரம் குறித்த தகவல் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந் நூல் முதன் முதலாக 1940 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன் முகவுரையில் நூலாசிரியர் ரேருகானே தேரர், "இந்நூலைப் படிப்பதன் மூலம் இலங்கையினதும் பர்மாவினதும் பௌத்தர்களிடையே உள்ள நெருக்கமான தொடர்பு குறித்து மேலும் தெளிவினைப் பெற்றுக் கொள்ளலாம். அதனால் அனைத்து சிங்கள பௌத்தர்களும் இதனை விரும்பிப் படிக்க வேண்டும்" என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இவ்வாறு விதந்துரைக்கப்படும் மியன்மார் எனும் பர்மா நாட்டுக்கு விஜயம் செய்யக்கூடிய விசேட சந்தர்ப்பம் ஒன்று எமக்கு அண்மையில் கிடைத்தது. அதுவும் கலகொட அத்தே ஞானசார தேரரின் தலைமையிலான பொதுபலசேனா அமைப்பின் தூதுக் குழுவொன்றுடனே நாம் பர்மாவுக்குப் பயணித்தோம். கடந்த ஆகஸ்ட் 25 ஆம் திகதிக்குப் பின்னுள்ள காலப் பகுதியில் பர்மாவின் ராகின் பிராந்தியத்தில் முஸ்லிம் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தொடர் தாக்குதலைத் தொடர்ந்து அங்கு உருவான நிலைமைகள் குறித்து பார்த்தறியவும் இந்நாட்டு பௌத்தர்களுக்கும் பர்மிய பௌத்தர்களுக்கும் இடையே பொதுவானதொரு ஒருமைப்பாட்டை உருவாக்கும் நோக்கங்களுக்காகவே எமது பயணம் அமைந்தது.
கடந்த நவம்பர் 7 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பன்னிரண்டு மணியளவில் நாம் ரங்கூன் விமான நிலையத்தை அடைந்தோம். எம்முடன் சென்ற தூதுக் குழுவின் முக்கியஸ்தர்களான ஞானசார தேரர், மாகல் கந்தே சுதத்த தேரர், கலாநிதி திலந்த விதானகே உள்ளிட்ட எங்களுக்கு அங்கு நல்ல வரவேற்பளிக்கப்பட்டது. பர்மாவின் பிரஞாசாமி தேரர், ரங்கூன் நகரில் வசித்து வரும் சிங்கள வாலிபர்களான ஹஷான், இந்திக்க உள்ளிட்ட பலர் விமான நிலையம் வந்து எம்மை நன்கு வரவேற்றனர்.
ஞானசாரதேரரின் பர்மிய பயணம் குறித்து இங்குள்ள இணையத்தளங்களில் பல்வேறு வகையிலும் தகவல்கள் வெளியாகின. அங்குள்ள மெண்டலே நகரில் நாம் தங்கியிருந்த ஹார்மனி ஹோட்டல் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. உண்மையிலேயே அவ்வாறானதொருநிலை ஏற்படவேயில்லை.
எமது பௌத்த தூதுக் குழுவுக்கு பொலிஸ் பாதுகாப்பு தேவையா என்று நாம் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்து மெண்டலே நகர பொலிஸ் பகுதித் தலைவர் கேட்டார். அப்போது எமக்கு வழிகாட்டியாக நியமிக்கப்பட்டிருந்த பர்மாவைச் சேர்ந்த பிரஞாசாமி என்ற தேரர், அவ்வாறான பாதுகாப்பு அவசியமில்லையென்று பதிலளித்தார். இச் செய்தியே கொழும்புக்கு வரும்போது வேறுவிதமாக அமைந்திருக்கிறது. பர்மிய பௌத்தர்களால் எமது தூதுக்குழு மிகவும் கௌரவமான முறையில் வரவேற்கப்பட்டமையை ஈண்டு குறிப்பிட வேண்டும்.
எமது குழு மண்டலே ஹோட்டலை அடைய முன்னரே மாபாத்தா அமைப்பின் தலைவர் அஷ்வின் விராது தேரர் அங்கு வந்து எமக்காகக் காத்திருந்து ஞானசார தேரரை மரியாதையுடன் வரவேற்றார்.
பின்னர் 8 ஆம் திகதி இரவு ரங்கூன் நகரில் இடம்பெற்ற 'பர்மாவைக் காப்பாற்றுவோம்' என்ற தொனிப் பொருளிலான மாநாட்டில் எமது தூதுக்குழுவும் கலந்து கொண்டது. எழுத்தாளர்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் பிரமுகர்கள் பலரும் இதற்கு வருகை தந்திருந்தனர். அங்கு நிகழ்த்தப்பட்ட அனைவரதும் கருத்தாக அமைந்தவை, வங்காள பயங்கரவாதிகளுக்கு பௌத்த தேசத்தைத் தாரைவார்த்துக் கொடுக்க முடியாது என்பதாகவே இருந்தது.
பர்மாவில் ரோஹிங்யர்கள் வங்காள தேசத்தவர்களாகவே கருதப்படுகின்றனர். அதேபோன்றே ராகின் பௌத்தர்களைப் போன்று இந்துக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று இக்கூட்டத்தில் அரசுக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டது. இதில் எமது குழு கலந்து கொண்டதன் மூலம் எமது இரு நாடுகளதும் பௌத்த உறவு மேலும் வலுப்பெற வழியேற்பட்டது.
இப்பயணத்தின் மற்றுமொரு குறிப்பிடத்தக்க விடயமாக அஷ்வின் விராது தேரருடன் எமது ஊடகத்துக்கும் நேர்காணல் ஒன்று கிடைக்கப்பட்டமையைக் குறிப்பிடலாம். மாபாத்தா அமைப்புக்கு எதிராக கடந்த காலங்களில் பர்மா அரசால் ஒரு சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதால் விராது தேரர் சர்வதேச ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிப்பதை தவிர்த்து வந்தார். இலங்கை பௌத்தர்கள் பர்மாவின் உண்மை நிலைவரங்களை அப்படியே தெளிவுபடுத்தியதால் எங்கள் மீது விராது தேரர் நல்ல மதிப்பு வைத்திருந்தார்.
தேரவாத மியன்மார் நாட்டின்மீது மேற்கொள்ளப்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்தும் ராகின் பிராந்தியத்தில் இடம்பெறும் விடயங்கள் குறித்தும் விராது தேரர் உண்மை நிலைவரங்களை வெளியிட்டார். அதனை இங்கு தருகிறேன்.
கடந்த ஆகஸ்ட் 25 ஆம் திகதி 32 பொலிஸ் நிலையங்களுக்கும் இராணுவ முகாம் ஒன்றுக்கும் முஸ்லிம் பயங்கரவாதிகள் தாக்குதல் தொடுத்தனர். இங்கு பொலிஸ் நிலையம் ஒன்றில் சில அதிகாரிகளே கடமையில் இருக்கின்றனர். ஆனால் வங்காள இன பயங்கரவாதிகளோ நூற்றுக்கணக்கில் வந்து தாக்குதல் நடத்தினர். துப்பாக்கி, வாள், தடிகள், அவர்களால் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுகள் போன்ற ஆயுதங்களுடன் தாக்குதல் தொடுத்தனர். அப்போது சிறு தொகையான பொலிஸாரால் எப்படி இதற்கு ஈடுகொடுக்க இயலும். தாக்குதலுக்கு இலக்கான எல்லா பொலிஸ் நிலையங்களினதும் நிலைமை இப்படித்தான் இருந்தது.
வங்காள பயங்கரவாதிகள் செப்டெம்பர் 1 ஆம் திகதி ராகின் பிராந்தியத்திலுள்ள பௌத்த, இந்து மக்கள் குடியிருப்புகளைத் தாக்கினர். குழந்தைகளைக்கூட கழுத்து அறுத்துக் கொன்றனர்.
விராது தேரர் இவ்வாறு கூறியவாறே மேற்படி பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்வுகளை வீடியோ பதிவு மூலம் எமக்குக் காண்பித்தார். மேலும் அவர் தொடர்ந்தார்.
இக் கிராமங்களுக்கு வங்காள பயங்கரவாதிகள் புர்கா அணிந்து அடையாளம் தெரியாதவாறே புகுந்துள்ளனர். புர்காவுக்குள்ளே துப்பாக்கி, வாள்கள் மற்றும் ஆயுதங்களைத் திணித்திருந்தனர். இப்பயங்கரவாதிகளுடன் ஐ.எஸ். உறுப்பினர்களும் இணைந்திருந்தனர். அவர்கள் இந்து குடியிருப்புக்கள் மீது தீ வைத்தனர். பௌத்த விகாரைகளைத் தாக்கி அங்குள்ள புத்தர் சிலைகளின் தலைகளை உடைத்தெறிந்தனர். (அவ்வாறு உடைக்கப்பட்ட புத்தர் சிலையொன்றின் படத்தையும் எமக்குக் காட்டினார்)
சித்வே, புட்டவுன், மொண்டவுன் ஆகிய பிரதேசங்களிலுள்ள கிராமங்களிலும் தாக்குதல் நடத்தினர். இப்பயங்கரவாதக் குழுவினர் கமொண்டே, யெபொட்டார் ஆகிய இந்துக்களது இரு கிராமங்களிலும் உள்ள மக்களைக் கூட்டுக் கொலை செய்து கூட்டாகவே குழி தோண்டிப் புதைத்தனர். பின்னர் இராணுவத்தினரால் பாரிய குழியொன்றிலிருந்து 45 பேர்களது சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டன. இவர்களது தாக்குதலுக்கு அஞ்சி அடைக்கலம் புகுந்து முகாம்களில் தங்கியிருந்த பௌத்த, இந்து அகதிகள் இப்போதுதான் இராணுவ உதவியால் தம் இருப்பிடங்களுக்கு மீண்டுள்ளனர். அப்படியிருந்தும் சிலர் மீண்டும் குடியேறாது பீதியில் இன்னும் தயங்கிக் கொண்டுதான் இருக்கின்றனர். ஏற்கனவே ஏற்பட்ட அச்சம் இன்னும் நீங்கவில்லை. அப்படியும் நீங்குமா? என்று விராது தேரர் விளக்கினார்.
பர்மிய பௌத்தர்கள், முஸ்லிம் அடிப்படைவாத சவாலுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருப்பதை இவரது கூற்றின் மூலம் எம்மால் உணர்ந்து கொள்ள முடிந்தது. இதுபற்றி அவரிடம் வினவிய போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
பிரித்தானிய ஆட்சிக் காலத்திலிருந்தே இந்த அச்சுறுத்தல் இருந்து வந்துள்ளது. 1938 ஆம் ஆண்டு மெண்டல மற்றும் யன்குன் நகரங்களில் பௌத்த – முஸ்லிம் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இக்கலவரத்துக்கு 786 என்ற முஸ்லிம்களின் இலக்கம் ஒன்றே காரணமாக அமைந்தது. இவற்றின் பின்னால் நிகழ்ச்சி நிரல் ஒன்று மறைந்துள்ளது. இது வேறொன்றுமில்லை, இந்நாட்டையும் முஸ்லிம் நாடொன்றாக்குவதே இவர்களின் இலக்காகும். இதனை முறியடிக்க நாம் செயற்பட்டு வருகிறோம். 1942 மே 13 ஆம் திகதி, ‘சித்வே’ பௌத்த – முஸ்லிம் கலவரம் மூண்டது. அதன்போது 45 பௌத்த கிராமங்களில் 20 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டார்கள். இது குறித்து சர்வதேச ஊடகங்கள் பேசவில்லை. இப்போதும் இத்தகைய தாக்குதல்கள் இடம்பெறுகின்றன. அன்று பௌத்தர்கள் வாழ்ந்த கிராமங்கள் இன்று முஸ்லிம் கிராமங்களாகியுள்ளன. இப்போது நிலைமை மோசமாகியுள்ளது. இன்று பௌத்தர்களுக்கு எதிராக ஜிஹாத் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விராது தேரர் பர்மிய மொழியில் கருத்துக்களைக் கூறினார். இவ்வுரையை எமக்கு வழிகாட்டுவதற்காக அமர்த்தப்பட்ட பிரஞாசாமி தேரர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இவர் விராது தேரருடன் இணைந்து செயற்படுபவர். அத்துடன் இலங்கையில் பல வருடங்கள் தங்கியிருந்து கல்வி கற்றவராவார்.
பர்மிய பெளத்தர்களுக்கு எதிராக இயங்கும் சர்வதேச ஊடகங்கள் குறித்து, வினவிய போது, விராது தேரர் சற்று மௌனம் சாதித்து விட்டு கூறியதாவது, உலகின் சக்திவாய்ந்த ஊடகங்கள் முஸ்லிம்களின் அதிகாரத்திற்குட்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையும் முஸ்லிம்களின் சக்திக்குட்பட்டு விட்டது. ராகின் பிராந்தியத்தில் தனியான அரசொன்றை ஸ்தாபிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா, ஐரோப்பிய சம்மேளனம் ஆகியன இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது பாரிய பிரச்சினையாகும் என்றார்.
உலக பௌத்தர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் கூறும் அறிவுரையென்ன? என்று வினவினோம்.
உலக பௌத்தர்கள் அனைவரும் ஒன்று படவேண்டும். வரலாற்றில் நாம் இரண்டு தடவைகள் தோற்றுப் போயுள்ளோம். மீண்டும் தோல்வியுறுவோமேயானால் என்ன நடக்கும் என்பதை சிந்தித்து நாம் அனைவரும் பெளத்த கலாசாரத்தைப் பாதுகாக்க ஒன்று படவேண்டும் என்றார்.
விராது தேரருடனான சந்திப்பை முடித்துக் கொண்டு நாம் மெண்டலே நகரிலுள்ள மயோஸியேன் பிரிவெனாவைப் பார்வையிடச் சென்றோம். அங்கு 2750 பிக்குமார் பயின்று கொண்டிருக்கிறார்கள். நாம் ஏற்கனவே கலந்துரையாடிய விராது தேரரின் இரு மாடிகள் கொண்ட கட்டிடத்திலும் பிக்குகள் தங்கும் 54 விடுதி அறைகள் காணப்பட்டன.
மொத்தத்தில் பர்மிய மக்கள் வங்காள பயங்கரவாதிகள் மீது கடும் விசனத்துடன் இருப்பதை இப்பயணத்தின் மூலம் நாம் கண்டு கொண்டோம்.
நன்றி: திவயின.
செய் அல்லது செத்து மாடி புநா மவன
ReplyDeleteகொட் ... லாடம் அடிக்கணும்
ReplyDeleteI hope some intellectual who is expert in this subject will give a fitting response to these blatant lies..my humble suggestion to the editorial board is : pls kindly .review the news before publication.We know very well Diwayina is one of the leading news media that is publishing Anti Islamic un authentic news..
ReplyDelete.
Yes, brother. This is a hoax to deceive Ceylon Sinhalese. We must crystallize the facts in sinhala language.
Deleteநன்கு திட்டமிடுததப்பட்ட கட்டுக்கதை இதன் அர்த்தம் இங்கும் பாரிய இனப்படுகொலைகளைக் செய்வதற்கு தயாராக விட்டார்கள் என்பதை நாட்டுமக்களையணைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமாகும் அவசரமாக இதற்குக் தகுந்தபடி முன்னேற்பாடுகளைக் மேற்கொள்ள வேண்டியது அணைவருடைய முக்கியமான கடமையாகும்
ReplyDelete