எனக்குத் தெரியாத ராஜபக்ஷாக்களா? என சத்தமாக சிரித்த ஜனாதிபதி
பஸில் ராஜபக்ஷவுடன் ஜனாதிபதி மைத்திரி தொலைபேசியில் உரையாடியபோது கூட்டு எதிர்க்கட்சியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் குறித்தும் பேசப்பட்டதாம்.
அப்போது பஸில், ""ஜனாதிபதி அவர்களே.... கூட்டு எதிர்க்கட்சியின் அரசியல் குழு என்ன முடிவு எடுக்குமோ அதன்படியே செய்வோம்'' என்றாராம். சரி என போனை வைத்த ஜனாதிபதி, பக்கத்தில் இருந்த
உயர்மட்ட பிக்கு ஒருவரைப் பார்த்து ""எனக்குத் தெரியாத ராஜபக்ஷாக்களா... அவர்கள் என்றைக்கு கட்சிக் குழுக் கூட்டத் தீர்மானத்தின்படி செயற்பட்டார்கள்?'' என்று சத்தமாக சிரித்தபடி சொன்னாராம்.
பாம்பின்கால் பாம்பறியும் என்பார்களே...
Post a Comment