பிரத்தியேக வகுப்புக்களுக்கு தடை, மீறினால் சட்ட நடவடிக்கை
இன்று -05- நள்ளிரவு முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை கல்வி பொது தராதர பத்திர சாதாரண தர மாணவர்களுக்கான செயலமர்வு, கருத்தரங்கு, மேலதிக வகுப்புக்கள் அனைத்திற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைத் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
குறித்த உத்தரவை மீறி வகுப்புகளை நடத்துவோர் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கும் பட்சத்தில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்தவொரு நபரோ அல்லது நிறுவனமோ இந்த உத்தரவை மீறினால் அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது பரீட்சைத் திணைக்களத்திற்கு அறிவிக்க முடியும்.
அதனுடன் தொடர்புடைய பரீட்சைத் திணைக்களத்தின் தொலைப்பேசி இலக்கங்கள் கீழே...
1911, 0112784208, 0112784537,0113188350, 0113140314
காவற்துறை தலைமையகம் - 011242111, 119
This system should ban completly.
ReplyDelete