சிறப்பான ஜோடியை பிரித்துவிட்டீர்கள் - ரசிகர்கள் கடும் கோபம்
இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை ஏன் மாற்றம் செய்தீர்கள் என்று இரசிகர்கள் கடும் கோபத்துடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்தியா இலங்கை அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. இத்தொடரை இந்திய அணி 2 1 என்று வென்று அசத்தியது.
இந்நிலையில் இலங்கை ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். ஏனெனில் இலங்கை அணியில் தொடக்க வீரர்களாக தனுஷ்க குணதிலக மற்றும் நிரோசன் திக்வெல தான் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
9 முறை தொடக்க ஜோடியாக களமிறங்கிய இந்த ஜோடி 618 ஓட்டங்களைக் குவித்துள்ளது. அதாவது இந்த ஜோடியின் சராசரி 68.66 ஆக உள்ளது.
ஆனால் இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் மாற்றாக உபுல் தரங்க மற்றும் தனுஷ்க குணதிலக களமிறங்கினர்.
இவர்களின் தொடக்க ஜோடி சொல்லிக் கொள்ளும் படி இல்லை. அதுமட்டுமன்றி தொடக்க வீரரான திக்வெல ஐந்தாவது மற்றும் நான்காவது வீரராக களமிறக்கப்பட்டுள்ளார்.
அந்த இடத்தில் திக்வெலவால் ஜொலிக்க முடியவில்லை. இதைக் கண்ட ரசிகர்கள் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் யார் இப்படி ஒரு முடிவை எடுத்தது? இது ஒரு முட்டாள் தனமான முடிவு. சிறப்பான தொடக்க ஜோடியை பிரித்துவிட்டீர்கள், ஏன்? என்று சரமாரியாக கேள்வி கேட்டுள்ளனர்.
Post a Comment