Header Ads



கிந்­தோட்டை கலவரம் 3 வாரங்­க­ளா­கியும் நஷ்­ட­யீடு இல்லை

(விடிவெள்ளி)

காலி மாவட்­டத்தின் கிந்­தோட்டை பிர­தே­சத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றைகள் கட்­ட­விழ்க்­கப்­பட்டு மூன்று வாரங்கள் கடந்­து­விட்ட போதிலும் இது­வரை நஷ்­ட­யீடு வழங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை என பிர­தேச மக்கள் தெரி­விக்­கின்­றனர்.

 இந்த வன்­முறைச் சம்­ப­வங்­களில் முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான சுமார் 80 க்கும் மேற்­பட்ட வீடுகள் பாரிய மற்றும் சிறி­ய­ள­வி­லான சேதங்­களை எதிர்­கொண்­டுள்ள போதிலும் அவற்றின் மதிப்­பீ­டு­களை மேற்­கொள்­வ­தற்கு கிராம சேவை­யா­ளர்­களோ தொழில்­நுட்ப உத்­தி­யோ­கத்­தர்­களோ இது­வரை வருகை தர­வில்லை என பாதிக்­கப்­பட்ட மக்கள் 'விடி­வெள்ளி'க்குத் தெரி­வித்­தனர்.

கிந்­தோட்­டையில் வன்­மு­றைகள் கார­ண­மாக 81 வீடு­களும் 18 வர்த்­தக நிலை­யங்­களும் சேத­ம­டைந்­துள்­ளன. மேலும் 6 முச்­சக்­கர வண்­டி­களும் ஒரு லொறியும் வேன் ஒன்றும்  8 மோட்டார் சைக்­கிள்­களும் தாக்­கியும் எரித்தும் சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. நான்கு பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்­டுள்­ள­துடன்  8 திருட்டு சம்­ப­வங்­களும் பதி­வா­கி­யுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளி­யிட்­டுள்ள புள்­ளி­வி­ப­ரங்­களில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. 

கிந்­தோட்டை அசம்­பா­வி­தங்­களின் பின்னர் அங்கு விஜயம் செய்த பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க, பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நஷ்­ட­யீடு வழங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை துரி­தப்­ப­டுத்­து­மாறு அதி­கா­ரி­க­ளுக்குப் பணிப்­புரை விடுத்­தி­ருந்தார். அதே­போன்று ஏனைய முஸ்லிம் அமைச்­சர்­களும் நஷ்­ட­ஈடு வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என உறு­தி­ய­ளித்­தி­ருந்­தனர்.

எனினும் குறித்த வீடு­க­ளுக்கு இது­வரை கிராம சேவை­யா­ளர்­களோ அல்­லது தொழில்­நுட்ப உத்­தி­யோ­கத்­தர்­களோ வருகை தந்து சேத விப­ரங்­களை நேரில் கண்­ட­றிந்து மதிப்­பீ­டு­களை மேற்­கொள்­ள­வில்லை என மக்கள் தெரி­விக்­கின்­றனர்.

இதன் கார­ண­மாக உடைக்­கப்­பட்ட வீடு­களை தொடர்ந்தும் அவ்­வாறே பேண வேண்­டிய நிர்ப்­பந்தம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் இதன்­கா­ர­ண­மாக தாம் பாது­காப்­பற்ற சூழலை எதிர்­கொண்­டுள்­ள­தா­கவும் ரணமாக தாம் பாதுகாப்பற்ற சூழலை எதிர்கொண்டுள்ளதாகவும் கிந்தோட்டை மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈட்டைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

2 comments:

  1. This incident has made many muslim political Heroes but nothing else...

    ReplyDelete
  2. இவர்கள் கரங்கள் மூலம் இது நடக்கும் என்றால் எதிர்வரும் தேர்தல் முன் தருவார்கள்.

    அல்லாது போனால் என்றைக்குமே இவர்கள் தரமாட்டார்கள்.

    ஓர் புதிய சக்தியொன்றின் மூலமே இது சாத்தியமாகும்.

    ReplyDelete

Powered by Blogger.