Header Ads



செல்பியால் 2 மாணவர்கள் பலி

முல்லைத்தீவு – புதுகுடியிருப்பில் ஆற்றில் நீராடிய இரண்டு பாடசாலை மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

நேற்று(24) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நண்பர்கள் சிலருடன் ஆற்றில் நீராட சென்ற குறித்த இரண்டு மாணவர்களும், கையடக்க தொலைபேசியில் செல்பி படம் எடுப்பதற்கு ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

இதன்போது அங்கு மணல் அகழ்வதற்காக வெட்டப்படிருந்த குழியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர்கள் புதுகுடியிருப்பு சிவநகர் பிரதேசத்தை சேர்ந்த 17 வயதான இரண்டு இளைஞர்கள் என தெரியவந்துள்ளது.

பிரதேசவாசிகள் மற்றும் காவல்துறையினரும் இணைந்து சடலங்களை மீட்டுள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்துள்ள மாணவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் புதுகுடியிருப்பு காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

No comments

Powered by Blogger.