தாஜுதீன் கொல்லப்பட்ட தினம், அலரிமாளிகையிலிருந்து சென்ற Call களை இன்னும் கண்டுபிடிக்கவில்லை
கோப் குழு உறுப்பினர்களின் தொலைபேசி உரையாடலை கண்டுபிடிக்க முடியுமான குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு தாஜுதீன் கொலைசெய்யப்பட்ட தினம் அலரிமாளிகையிலிருந்து எடுக்கப்பட்ட தொலைபேசி உரையாடல்களை இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி கொலன்னாவ அரசியல் தொகுதிக் கூட்டம் நேற்று முன்தினம் மாலை கொலன்னாவ மங்கலபாய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சி கொலன்னாவ தொகுதி அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ். எம்.மரிக்கார் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், ஐக்கிய தேசியக் கட்சி கடந்த 20 வருடங்களுக்கு மேலாக எதிர்க்கட்சியில் இருந்துள்ளது. 2015 நாங்கள் மேற்கொண்ட பாரிய முயற்சியினால் அதிகாரத்துக்கு வர முடிந்தது.
அன்று நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்திருந்ததுடன் சர்வதேச மட்டத்தில் நாங்கள் ஒதுக்கப்பட்டிருந்தோம். இந்நிலையில் நாங்கள் தனித்து ஆட்சிசெய்ய அதிகாரம் இருந்தாலும் அனைத்துக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு ஆட்சியமைப்பதன் மூலமே நாட்டைப் பாதுகாக்கலாம் என்று தேசிய அரசாங்கத்தை அமைத்தோம்.
தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டதால் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களுக்கு எங்களால் போதுமானளவு உதவிகளைச் செய்ய முடியவில்லை என்ற குறை இருக்கின்றது, என்றாலும் சர்வதேச மட்டத்தில் ஒதுக்கப்பட்டிருந்த நாட்டை, அனைத்து நாடுகளாலும் அங்கீகரிக்கும் நிலைக்கு கொண்டுவர முடியுமாகியுள்ளது. அதேபோன்று பொருளாதார அபி விருத்தி மேற்கொள்வதற்கு தேவை யான அடித்தளத்தை அமைக்கக் கூடியதாக இருந்தது என்றும் தெரிவித்தார்.
எம்.ஆர்.எம்.வஸீம்)
தயவுசெய்து உங்களின் கீழ்த்தரமான அரசியல் வியாபாரத்திற்காக பயணித்த உடல்களை மீண்டும் மீண்டும் தோண்ட வேண்டாம்... இந்த நல்லாட்சி எனும் கள்ளாச்சியில் நீங்கள் மக்களுக்கு வழங்கிய பொய் வாக்குறுதியை மீண்டும் மீண்டும் புதுப்பொலிவுடன் வழங்காமல் வேறு ஏதாவது முறையில் வியாபாரம் செய்யுங்கள்.. இந்த அரசாங்கம் கடந்த கால ஊழல் வாதிகளையும் கொலையாளிகளையும் பாதுகாக்கும் அரசாகும்...தாஜுடீனின் குடும்பத்தை நிம்மதியாக வாழ விடுங்கள்...
ReplyDeleteYes it's true
DeleteMujibur Rahman is blaming himself(UNP). If joint opposition is smart to expose your wrongdoings (central bank bond issue), why cannot you (UNP) do the same.
ReplyDelete