Header Ads



ஜனாதிபதியின் உறவினர் வீட்டில் கொள்ளை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உறவு முறையிலான சகோதரியின் வீடு, உள்ளிட்ட 40 வீடுகளில் தனது கைவரிசையை காண்பித்த, ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர், இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் என்றும் தம்புத்தேகம கொன்வேவ பகுதியில் வைத்தே அவர் கைதுசெய்ததாக மாவத்தகம பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபருக்கு எதிராக ​அனுராதபுரம், தம்புத்தேகம, மாவத்தவெவ மற்றும் கிராந்துகோட்டை ஆகிய நீதிமன்றங்களின் அதிகாரத்து உட்பட்ட நீதிமன்றங்களில் அவருக்கு எதிராக 40 வழக்குகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அவர், பொலிஸ் அதிகாரிகளின் வீடுகளிலும் கைவரிசையை காண்பித்து, பணம் மற்றும் தங்க ​நகைகளை உள்ளிட்ட பெறுமதிவாய்ந்த பொருட்களையும் அவர் கொள்ளையடித்துள்ளதாக அறியமுடிகின்றது,

No comments

Powered by Blogger.