Header Ads



வவுனியாவில் குறிவைக்கப்படும் முஸ்லிம்களின் வர்த்தகம்


-ARA.Fareel-

"கடந்த மாதம் 31 ஆம் திகதி எங்­க­ளது கடை­க­ளுக்கு முன்னால் ஆர்ப்­பாட்டம் நடத்­தி­ய­வர்கள். ‘இது தான் ஆரம்பம். நாங்கள் கடை­களை எடுத்தே தீருவோம்’ என்று கூறிச் சென்­றார்கள். இரு­பது நாட்கள் கழித்து கடைகள் தீயில் சாம்­ப­ராகி விட்­டன" என்­கிறார் வவு­னி­யாவில் தீ அனர்த்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட கடை­யொன்றின் உரி­மை­யாளர்.

கடந்த காலங்­களில் பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்­த­வர்­களால் மற்றும் சில குழுக்­களால் முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்கள் எரி­யூட்­டப்­பட்­டன. முஸ்­லிம்­களின் வர்த்­த­கத்தைச் சிதைக்­க­வேண்டும் என்­பதே அவர்­களின் குறிக்­கோ­ளாக இருந்­தது.

ஆனால் இன்று தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் ஒற்­று­மை­யாக வாழ்ந்து வரும் வவு­னியா நகரில் முஸ்­லிம்­களின் கடைகள் தீக்கிரை­யா­கி­யுள்­ளன. இந்தச் சம்­பவம் நடை­பெ­று­வ­தற்கு சில தினங்­க­ளுக்கு முன்பு முஸ்­லிம்­களின் கடை­க­ளுக்கு எதி­ராக அங்கு ஆர்ப்­பாட்டம் நடத்­தி­ய­வர்கள் விடுத்த சவால்கள் அனர்த்­தத்­திற்கு காரணம் என அவர்கள் மீது விரல் நீட்ட வைத்­துள்­ளது.

வவு­னியா பஸார் ஜும்ஆ பள்­ளி­வா­ச­லுக்குச் சொந்­த­மான கடைகள் 38 இயங்கி வரு­கின்­றன. இவற்றில் 14 கடைகள் பெட்டிக் கடை­க­ளாகும். இந்த 14 கடை­களில் மூன்று கடை­களே தீ அனர்த்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. இரு கடைகள் முழு­மை­யாக தீயினால் அழி­வுக்­குள்­ளா­கி­யுள்­ளன. ஒரு கடை பாதி­ய­ளவு எரி­யுண்­டுள்­ளது.

முழு­மை­யாக எரி­யுண்ட பேக் விற்­பனை செய்யும் கடைக்கு 25 இலட்சம் ரூபா நஷ்­ட­மேற்­பட்­டுள்­ளது. மேலும் முழு­மை­யாக சேத­ம­டைந்த பென்சி சாமான்கள் விற்­பனை செய்யும் கடைக்கு 5 இலட்சம் ரூபாவும் பாதி­ய­ளவில் சேத­ம­டைந்­துள்ள கடைக்கு 1 ½ இலட்சம் ரூபாவும் நஷ்ட மேற்­பட்­டுள்­ளது. மூன்று கடை­க­ளுக்கும் மொத்தம் 31 ½ இலட்சம் ரூபா நஷ்­ட­மேற்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

முஸ்லிம் கடை­க­ளுக்கு எதி­ரான ஆர்ப்­பாட்டம்

வவு­னி­யாவில் பள்­ளி­வா­ச­லுக்குச் சொந்­த­மான முஸ்லிம் கடைகள் சட்­ட­வி­ரோ­த­மா­ன­தெ­னவும் அக்­க­டைகள் அவ்­வி­டத்­தி­லி­ருந்து அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மெ­னவும் கோரி தமிழ் இளை­ஞர்கள் குழு­வொன்­றினால் கடந்த அக்­டோபர் மாதம் 31 ஆம் திகதி ஆர்ப்­பாட்டம் ஒன்று நடத்­தப்­பட்­டது. ஆர்ப்­பாட்­டத்தில் சுமார் 15 பேர் கலந்து கொண்­டனர். அவர்கள் வவு­னியா நகரை ஊர்­வ­ல­மாக வலம் வந்து வவு­னியா பஸார் பள்­ளி­வாசல் முன்னால் நின்று பதா­தை­களை ஏந்தி ஆர்ப்­பாட்டம் செய்­தனர்.

குறிப்­பிட்ட கடைகள் சட்­ட­வி­ரோ­த­மா­ன­தெ­னவும் அவை அகற்­றப்­பட வேண்­டு­மெ­னவும் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­களை வலி­யு­றுத்தும் வகையில் ஆர்ப்­பாட்டம் அமைந்­தி­ருந்­தது.

குறிப்­பிட்ட கடை­களை அமைப்­ப­தற்கு வவு­னியா நகர சபை ஒரு கடைக்கு 5 அடி வீதம் சட்ட ரீதி­யாக ஒதுக்­கி­யுள்­ள­தாக கடை உரி­மை­யா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர். என்­றாலும் வவு­னியா நகர் 2017 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் முதல் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபையின் பொறுப்பில் இருப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இந்தக் கடைகள் யுத்தம் நில­விய காலத்தில் வழங்­கப்­பட்­டுள்­ளதும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இந்த ஆர்ப்­பாட்­டத்­திற்கு அப்­ப­கு­தி­யி­லுள்ள பெரும்­பான்மைத் தமி­ழர்கள் ஆத­ர­வ­ளிக்­க­வில்லை என்­பதும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

தீ அனர்த்தம்

வவு­னியா பஸார் பள்­ளி­வா­ச­லுக்குச் சொந்­த­மான இந்தக் கடை­களில் கடந்த 20 ஆம் திகதி அதி­காலை 1.15 மணி­ய­ளவில் தீ அனர்த்தம் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. தீ பர­வி­ய­தை­ய­டுத்து பள்­ளி­வா­ச­லுக்கு அறி­விக்­கப்­ப­டவே பள்­ளி­வாசல் ஒலி­பெ­ருக்கி மூலம் சம்­பவம் அறி­விக்­கப்­பட்­டது. உட­ன­டி­யாக ஒன்று திரண்ட முஸ்­லிம்கள் பள்­ளி­வா­ச­லி­லிருந்து வாளிகள் மூலம் நீரைக் கொண்டு வந்து தீயை அணைக்க முயற்சி செய்­த­போதும் அது முடி­யாமற் போயுள்­ளது. இரு கடைகள் தீயினால் முற்­றாகக் கரு­கி­யுள்­ளன. தீய­ணைப்புப் படை­யினர் வர­வ­ழைக்­கப்­பட்டு தீ ஏனைய கடை­க­ளுக்குப் பர­வாமல் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரப்­பட்­டுள்­ளது. 

சம்­பவம் நடந்த தினம் அதி­காலை 1.15 மணி­ய­ளவில் பஸ்ஸில் வவு­னி­யா­வுக்கு வந்து சேர்ந்த சரூக் என்­பவர் சம்­ப­வத்தை நேரில் கண்­டுள்ளார். இது தொடர்பில் அவர் பொலிஸில் வாக்கு மூல­மொன்­றி­னையும் அளித்­துள்ளார்.

நான் பஸ்ஸில் வந்து இறங்கி நடந்­து­வ­ரும்­போது காலை 1.15 மணி­ய­ளவில் ஒருவர் வவு­னியா பஸார் பக்­கமும் மேலும் ஒருவர் ஹொர­வப்­பொத்­தான வீதிப்­பக்­கமும் ஓடிக் கொண்­டி­ருந்­தார்கள். பள்­ளி­வா­ச­லுக்கு முன்­னா­லி­ருந்த கடைகள் தீயினால் எரிந்­து­கொண்­டி­ருந்­தன. எனக்குப் பயம் வந்­து­விட்­டது. நான் பள்­ளி­வா­ச­லுக்கு வெளியே இருந்து சப்­த­மிட்டேன். அதன் பிறகு பலர் ஓடி வந்து தீயை அணைக்கும் முயற்­சி­களில் ஈடு­பட்­டார்கள் என்று பொலி­ஸா­ருக்கு அளித்­துள்ள வாக்கு மூலத்தில் அவர் தெரி­வித்­துள்ளார்.

சி.சி.ரி.வி. கமரா பதி­வுகள்

தீயினால் சேதங்­க­ளுக்­குள்­ளான கடை­க­ளுக்கு முன்னால் உள்ள கடை­யொன்றின் சி.சி.ரி.வி. கமெரா பதி­வு­களைப் பெற்று பொலிஸார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். இக்­க­மரா பதி­வுகள் சந்­தேக நபர்­களை இனங்­காணக் கூடி­ய­தாக இருக்­கு­மென பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். அப்­ப­திவில் மோட்டார் சைக்­கிளில் இருவர் இருப்­பது பதி­வா­கி­யுள்­ளது. பதி­வுகள் தெளி­வாக இல்­லா­மையால் சி.சி.ரி..வி கமெரா பதி­வுகள் மேல­திக ஆய்­வுக்­காக மொரட்­டுவ பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

கடை உரி­மை­யாளர் பிரேம் நவாஸ்

தீயினால் பாதிக்­கப்­பட்ட 5 இலட்சம் ரூபா நஷ்­ட­மேற்­பட்ட பென்சி சாமான்கள் விற்­பனை செய்யும் கடையின் உரி­மை­யாளர் என்.எம். பிரேம் நவாஸ் தீ அனர்த்தம் தொடர்பில் விப­ரிக்­கையில்;

எனது கடை தீயினால் எரி­வது தொடர்பில் அறி­விக்க எனக்கு தொலை­பேசி அழைப்­புகள் அதி­காலை 1.50 மணிக்கு எடுக்­கப்­பட்­டுள்­ளது. அப்­போது நான் நித்­தி­ரையில் இருந்­துள்ளேன். அதி­காலை 2.05 மணிக்கே விபரம் அறிந்தேன். பள்­ளி­வாசல் தலைவர் விப­ரத்தை அறி­வித்தார். உடனே நான் ஸ்தலத்­துக்குப் போனேன். எனது கடை முற்­றாக எரிந்­தி­ருந்­தது.

இந்த தீ அனர்த்தம் மின்­சார ஒழுக்கு கார­ண­மாக ஏற்­பட்­டது என சிலர் பொய்ப்­பி­ர­சாரம் செய்­கி­றார்கள். எனது கடைக்கு அப்பால் உள்ள 4 ஆம் கடை­யி­லேயே மின்­சார மீட்டர் இருக்­கி­றது. இந்தக் கடை­யி­லி­ருந்தே எனக்கு மின்­சாரம் வழங்­கப்­பட்­டி­ருந்­தது. அன்­றைய தினம் மின்­சாரம் ஓப் செய்­யப்­பட்­டி­ருந்­தது. இந்த அனர்த்தம் நாச­கார செயல். கடை­க­ளுக்கு எதி­ராக ஆர்ப்­பாட்டம் நடத்­தி­ய­வர்­களே இதைச் செய்­தி­ருக்­கி­றார்கள். அன்று ஆர்ப்­பாட்டம் நடத்­தி­ய­வர்கள் ‘இதுதான் ஆரம்பம், இந்தக் கடை­களை நாங்கள் எடுத்தே தீருவோம்’ என்று சவால் விட்டுச் சென்­றார்கள். அத­னா­லேயே இது நாச­கார செயல் என சந்­தே­க­மின்றிக் கூற முடியும்.

எனது கடை முற்­றாக எரிந்து விட்­டது. வாழ்­வ­தற்கு எனக்கு வேறு வழி­யில்லை. 4 பிள்­ளைகள் இருக்­கி­றார்கள். இவர்­களில் 3 பேர் வயது வந்த பெண் பிள்­ளைகள். எமக்கு நீதி கிடைக்க வேண்டும் என சம்­பந்­தப்­பட்ட தரப்­பி­னரை வேண்டிக் கொள்­கிறேன் என்றார்.

பள்­ளி­வாசல் உப தலைவர் யூசுப் நஸார்

வவு­னியா பஸார் ஜும்ஆ பள்­ளி­வாசல் உப தலைவர் யூசுப் நஸார் சம்­பவம் தொடர்பில் தற்­போ­தைய நிலை­மையை விளக்­கினார். அவர் விப­ரிக்­கையில்; 

‘பள்­ளி­வா­ச­லுக்கும் கடை­க­ளுக்கும் தொடர்ந்து பொலிஸ் பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. பள்­ளி­வா­ச­லுக்கும் கடை­க­ளுக்கும் சி.சி.ரி.வி. கமெ­ராக்கள் பொருத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

கடந்த புதன்­கி­ழமை வட பிராந்­தி­யத்­துக்குப் பொறுப்­பான சிரேஷ்ட பொலிஸ் மா அதி­பரின் தலை­மையில் சம்­பவம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. கலந்­து­ரை­யா­டலில் பிரதி பொலிஸ் மா அதிபர், வவு­னியா வர்த்­தக சங்கப் பிர­தி­நி­திகள், சிவில் பாது­காப்பு பிர­தி­நி­திகள், மத­கு­ரு­மார்கள், கிராம சேவை­யா­ளர்கள் பிர­தேச செய­லாளர் ஆகியோர் கலந்து கொண்­டி­ருந்­தனர். 

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை விரைவில் இனங்காண முடியுமெனத் தெரிவித்தார் என்று கூறினார்.

இதேவேளை, கடைகளின் எரியுண்ட மாதிரிகள் இரசாயனப் பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பகுப்பாய்வு அறிக்கை பெற்றுக் கொள்ளப்பட்ட பின்பே தீ அனர்த்தத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்த முடியும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஆர்ப்பாட்டம் நடத்தியோர் மீது விசாரணை

வவுனியா நகரில் முஸ்லிம்களின் கடைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியோரில் இருவரை அழைத்து பொலிஸார் தீ அனர்த்தம் தொடர்பில் விசாரணை நடத்தினார்கள். விசாரணையின் போது தங்களுக்கும் சம்பவத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லையென அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வவுனியா நகரில் முஸ்லிம்களின் வர்த்தகத்தை அழிப்பதற்கு சில குழுக்கள் திட்டமிட்டுச் செயற்பட்டு வருகின்றன என்பது தெளிவாகிறது. எனவே அப் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென சமூகம் எதிர்பார்க்கிறது.

1 comment:

  1. இந்த தமிழ் பயங்கரவாதிகள் அழிந்தும் திருந்தவில்லை. ராஜபக்ச இருக்கும்வரை பெட்டிப்பாம்பாய் பொத்திக்கொண்டு இருந்த காடையர்கள் இன்று இந்தளவு தீவிரவாதம் புரிய கையாலாகாத முஸ்லிம் தலைமைகளும் காரணம்

    ReplyDelete

Powered by Blogger.