மாறப் போகுது கொழும்பு - பாராளுமன்றத்தில் அறிவிப்பு
தெஹிவளை, கல்கிஸ்ஸ உட்பட கொழும்பு நகரங்களில் வாகன நெரிசல் ஏற்படுவதற்கு காரணமாகும் வகையிலான எந்தவொரு வீடமைப்பு திட்டங்களுக்கும் கட்டட நிர்மாணத்திற்கும் இனிமேல் அனுமதி வழங்கப்போவதில்லை என மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
அத்துடன் கொழும்பு கோட்டையில் இருந்து பயணிக்கும் வகையிலான இலகு ரயில் அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை அடுத்த வருடம் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம். மேலும் கோட்டையில் இருந்து பொரளை வரையான அதிவேக பஸ்சேவையையும் விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வெளிவிவகார, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை, அபிவிருத்தி பணிப்பொறுப்பு அமைச்சுகளுக்கான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
நாட்டில் 60 இலட்சம் வாகனங்கள் உள்ளன. இவற்றில் 4 மில்லியன் வாகனங்கள் செயற்பாட்டில் உள்ளன. இதில் 70 வீதமானவை முச்சக்கர வண்டியும் துவிச்சக்கர வண்டியுமாகும். 10 இலட்சத்துக்கும் குறைவாகவே ஏனைய வாகன வகைகள் உள்ளன. இதன்படி போக்குவரத்து துறைக்கே அரசின் மூலதன செலவில் பெருந்தொகையானவற்றை செலவிடுகின்றோம். இதன்படி 300பில்லியன் ரூபா பெற்றோல் இறக்குமதிக்கு செலவிடப்படுகின்றது. மேலும் வாகனங்கள் மற்றும் வாகன இயந்திரங்களுக்கு 200 பில்லியன் ரூபா செலவிடப்படுகின்றன. எனவே வாகனங்கள் தொடர்ந்து அதிகரித்தால் வாகன நெரிசலுக்கு வழிவகுப்பதுடன் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும்.
இதன்படி பொது போக்குவரத்தை பலப்படுத்த வேண்டும். நாட்டில் 50 சதவீதமானவர்கள் பொது போக்குவரத்தில் பயணிக்கின்றனர். எனினும் தற்போதைக்கு 25 ஆயிரம் பஸ் வண்டிகளே களத்தில் உள்ளன. ஆனால் ஏனைய 50 வீதத்தினர் வேறு வாகனங்களில் பயணிக்கின்றனர். இதன்படி கணக்கிட்டு பார்க்கும் போது ஒரு பஸ் வண்டி சேவையில் இருந்து விலகினால் பயணிகள் பயணிப்பதற்கு 140 வாகனங்கள் தேவையாக உள்ளன. மேலும் டாடா பஸ்கள் எமக்கு இனிமேல் பிரயோசன தர முடியாது. ஆகையால் சொகுசு பஸ் வண்டிகளை களத்திற்கு இறக்க வேண்டும்.
அத்துடன் ஆங்கிலேயர் காலத்தின் பின்னர் ரயில் பாதை கட்டமைப்பில் எந்தவொரு மாற்றமும் வரவில்லை. இந்நிலையில் எமது அரசாங்கத்தினால் கொழும்பு கோட்டையில் இருந்து பயணிக்கும் வகையிலான இலகு ரயில் அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை அடுத்த வருடம் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம். மேலும் கோட்டையில் இருந்து பொரளை வரையான அதிவேக பஸ்சேவையையும் விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம். மேலும் மின்சார ரயில் சேவையயையும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளையும் ஆரம்பிக்கவுள்ளோம்.
இதேவேளை தெஹிவளை, கல்கிஸ்ஸ உட்பட கொழும்பு நகரங்களில் வாகன நெரிசல் ஏற்படுவதற்கு காரணமாகும் வகையிலான எந்தவொரு வீடமைப்பு திட்டங்களுக்கும் கட்டட நிர்மாணத்திற்கும் இனிமேல் அனுமதி வழங்கப்போவதில்லை. மேலும் நாடளாவிய ரீதியில் அரச காணிகளில் 10 வீதம் நெடுஞ்சாலை அபிவிருத்திக்கு பிரயோகம் செய்யப்படுகின்றது. இது பாதிப்பான செயற்பாடாகும் என்றார்.
தெஹிவளை வில்லியம் சந்தி தொடக்கம் இரத்மலானை மலிபன் சந்தி வரை பாதை பள்களமும்குழியுமாக கரடுமுரடாக மாற்றானுக்கு பாரபட்சம் காட்டினால் போல் திட்டமிட்டு பலவருடங்களாக அபிவிருத்தி செய்யப்படாமல் இருப்பது இந்த வாகன நெரிசலுக்கு முக்கிய காரணம் என்பதை ஏன் எவரும் கண்டுகொள்வதில்லை.
ReplyDeleteமுழு நாடும் உருப்படியாகும் பாட்டலி என்ற பெருச்சாலி தொலைந்தீல்
ReplyDeleteIvan oru recism.hamuduru muttaal
ReplyDelete