2 சமூகங்களிடையே கைகலப்பு, 3 பேர் கைது, சமாதானமாக செயற்பட இணக்கம்
வத்துகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வத்தேகெதரையில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த சிலருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் உருவான கைகலப்பினையடுத்து பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மூவர் வத்துகாமம் பொலிஸாரினால் தெல்ெதனிய நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து நீதிவான் அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இச்சம்பவம் பற்றி தெரிவிக்கப்படுவதாவது;
“வத்தேகெதரையில் உள்ள முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஹோட்டலில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மூவர் உணவருந்தச் சென்றுள்ளனர். அவ்வேளை ஹோட்டல் ஊழியர் ஒருவருக்கும், பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது கொதிநீர் பிரயோகம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த ஹோட்டல் ஊழியர் கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவத்துடன் தொடர்புபட்டதாக சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட மூவரே நீதிவான் நீதிமன்றில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதனையடுத்து வத்துகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வத்தேகெதர ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் எச்.எம்.குதூப்தீன் உட்பட நிர்வாகிகள், ஜமாலியா அஹதியா செயலாளர், பாத்ததும்பறை பிரதேச சபை முன்னாள் தலைவர் எம்.எச்.நஸீம்தீன், பொல்கொல்ல குல்லகெட்டுவ பன்சலை விகாராதிபதி ஆகியோர் கலந்து கொண்ட அமர்வில் சமாதான பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
வத்தேகெதரையில் வாழும் முஸ்லிம்களும், பெரும்பான்மை இனத்தவர்களும் சம்பவத்தை மறந்து ஒற்றுமைப் படுவதாக இணக்கம் கண்டனர்.
இரு தரப்பு சமாதானத்தினையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குவதற்கான முயற்சிகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
ARA.Fareel
Post a Comment