நியூயோர்க்கில் மைத்திரியுடன் ஹுசைன் சந்திப்பு
நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக தற்போதைய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நாயகம் ஸெய்த் ராஅத் அல் ஹுசெய்ன் பாராட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் 72வது அமர்வுக்காக நியூயோர்க் சென்றிருக்கும் ஜனாதிபதியைச் சந்தித்த ஹுசெய்ன், இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான தற்போதைய அரசின் முயற்சிகள் மெதுவாகவே முன்னகர்ந்தாலும், அவை திருப்தி தருவனவாக இருக்கின்றன என்று கூறியுள்ளார்.
Post a Comment