குற்றம் புரிந்துவிட்டு, வெளிநாட்டுக்கு தப்பியோடியவர்களை பிடிக்க நடவடிக்கை
நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல் செய்து தப்பித்து வெளிநாடுகளில் தஞ்சம்புகுந்தவர்களை கைது செய்வதற்கு சீனா, உக்ரேன்,ரஷ்யா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுடன் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளோம் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன நேற்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மீளஒப்படைத்தல் சட்டத்தின் கட்டளைகள் சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்கள் செய்து தப்பித்து வெளிநாடுகளில் தஞ்சம்புகுந்தவர்களை கைது செய்வதற்கு சீனா, உக்ரேன்,ரஷ்யா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுடன் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளோம்.
இதன்படியே இந்த சட்டத்தை சபையில் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளோம். சர்வதேச அளவில் பாரிய மோசடிகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் குறித்து நாம் அவதானம் செலுத்தியுள்ளோம். இதன்படி நிதி மோசடி, போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றங்களில் ஈடுபட்டு வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ளனர்.
இதன்படி சீனா, உக்ரேன்,ரஷ்யா ஆகிய நாடுகளுடன் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளோம். அதேபோன்று ஏனைய நாடுகளுடனும் இணக்கத்திற்கு வருவதற்கு நாம் நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இதன்மூலம் இலங்கையில் குற்றம் இழைத்த வெளிநாட்டவர்கள் குறித்து அவதானம் செலுத்துவோம் என்றார்.
ஐயா ஓர் அன்பான வேண்டுகோள் முதலில் இங்குள்ளவர்களை கைது செய்யுங்கள்.
ReplyDelete