இனவெறிக்கெதிராக போராடிய டெஸ்மோண்ட் டூடு, ஆங்சான் மீது கடும் விமர்சனம்
ரோஹிஞ்சாக்களின் இந்த அவல நிலையானது பல்வேறு நாடுகளில் கவனத்தையும், பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுக்க செய்துள்ளது. இந்நிலையை கையாளத் தவறியதாக மியான்மரின் நடைமுறைத் தலைவர் ஆங் சான் சு சி, விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.
இனவெறிக்கெதிராக போராடிய தென் ஆப்பிரிக்காவின் டெஸ்மோண்ட் டூடு கடந்த வியாழக்கிழமை இதுகுறித்து கூறும்போது, "மியான்மரின் மிக உயர்ந்த பதவியை அடைவதற்கு நீங்கள் கொடுக்கும் அரசியல் விலை உங்களது மெளனம்தான் என்றால், அந்த விலை கண்டிப்பாக உச்சபட்சமானது" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடி பல்வேறு ஆண்டுகள் வீட்டு சிறையில் இருந்தவரும், அமைதிக்கான நோபல் பரிசை வென்றவருமான ஆங் சான் சூ சியை "மக்களின் நீதிக்காகவும், மனித உரிமைகள் மற்றும் உங்கள் மக்களின் ஒற்றுமைக்காகவும் குரல் கொடுங்கள்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
Post a Comment