முஸ்லிம் அணியை பிரிப்பதன் பாரதூரம் -இன்றைய அரபா தின உரையின் சாரம்சம்
சவுதி அரேபிய சிரேஷ்ட அறிஞர்கள் குழுவின் உறுப்பினரும் அரச அலுவலகத்தின் ஆலோசகரும் ரியாத் ஜாமிஅதுல் இமாம் பல்கலைக்கழக விரிவுரையாளருமான கலாநிதி ஷேய்க் ஸாத் அல் சஸரி அவர்கள் அரபா பேருரையை நிகழ்த்தினார்கள்.
அவரது உரையில் அல் குர்ஆன் அஸ்ஸுன்னாவை பற்றி பிடிக்குமாறும் நபி ஸல் அவர்கள் காட்டிய வழியில் பயணிக்குமாரும் தக்வாவை கடைப்பிடிக்குமாரும் தவ்ஹீதை வாழ்வில் எடுத்து நடக்குமாரும் குடும்ப வாழ்வை அனுசரிக்குமாரும் உறவுகளை பேணிக்கொள்ளுமாரும் வேண்டிக்கொண்டதுடன் முஸ்லிம் அணியை பிரிப்பதன் பாரதூரம், பயங்கரவாத செயல்பாடுகளின் விளைவுகள் பலஸ்தீன் அக்ஸாவின் முக்கியத்துவம் போன்றவற்றையும் தொட்டு சென்றார்
முஸ்லீம் தலைவர்கள், உலமாக்கள் , செல்வந்தர்கள், ஊடக துறை சார்ந்தவர்கள் எவ்வாறு அல்லாஹ்வுக்கு பயந்து செயல்படவேண்டும் என்பதையும் எடுத்து காட்டினார்.
Post a Comment