Header Ads



நவம்பர் மாதம், உள்ளூராட்சி தேர்தல் - சர்வகட்சி கூட்டத்தில் தீர்மானம்

எதிர்வரும் நவம்பர் மாதம் இறுதி வாரத்தில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் என, இன்று (16) மாலை அலரி மாளிகையில் நடைபெற்ற கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கூட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளான அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, ரவூப் ஹகீம், மனோ கணேசன், ரிஷாட் பதியூதின், கபீர் ஹாசிம், பைசர் முஸ்தபா, லசந்த அழகியவன்ன, அஜித் பெரேரா, அநுரகுமார திசாநாயக்க, எம். ஏ. சுமந்திரன், தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய, சட்டமா அதிபர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இதன்போது, உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலத்துக்கான  உத்தேச திருத்த விதிகள் தொடர்பில் ஆராயப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.  

No comments

Powered by Blogger.