Header Ads



தம்பி மனைவியுடன் செல்பி எடுத்த அண்ணனை, தம்பியே கொலைசெய்த சம்பவம்

தம்பி மனைவியுடன் செல்பி எடுத்த அண்ணனை தம்பியே கொலைச் செய்த சம்பவத்தினால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் புலேந்திரன் என்ற நபர் தனது மனைவி விஜயலட்சுமியுடன் வசித்துவந்துள்ளார்.புலேந்திரன் அண்ணனான ராஜேந்திரன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். 

சிதம்பரத்தில் பணிபுரியும் இவர்களது கடைசி தம்பி வெங்கட்ரமணா 20 நாள் விடுமுறையில் சென்னையில் உள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளார்.நேற்று முன்தின இரவு வெங்கட்ரமணா அழைப்பின் பேரில் மூன்று சகோதரர்களும் மது அருந்தியுள்ளனர்.

அப்போது மதுபோதையில் இருந்த ராஜேந்திரன் வெங்கட்ரமணாவின் மனைவியுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை வெங்கட்ரமணாவிற்கு வட்ஸ்எப் ஊடாக அனுப்பியுள்ளார்.அதை பார்த்ததும் போதையில் ஆத்திரம் அடைந்த வெங்கட்ரமணா தனது அண்ணன் ராஜேந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். 

பின்னர் இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் முற்றி போக வெங்கட்ரமணா கத்தியால் ராஜேந்திரனை கொலை செய்துள்ளார்.இதையடுத்து பொலிஸாரால் வெங்கட்ரமணாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

No comments

Powered by Blogger.