Header Ads



'பயிற்சி பெற்ற ஆயுதக்குழு­வொன்று' செயற்­படுவ­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன'

நீதி­பதி இளஞ்­செ­ழியன் மீதான தாக்­கு­தலை வடக்­கிலே வன்­முறை செயற்­பா­டுகள் இல்லை ஓய்ந்து விட்­டது என்று சொல்லும் போது, இல்லை இல்லை இன்னும் அங்கு இருக்­கின்­றது என்று சொல்லி அர­சியல் செய்ய விரும்பும் சிலரின் செயற்­பா­டா­கவே கரு­து­கின்றேன் என்று தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான மனோ கணேசன் தெரி­வித்­துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரி­வித்ததாவது;

இன்று நாட்டில் நல்­லாட்சி நடை­பெற்றுக் கொண்­டி­ருக்கும் இவ்வேளையில் யாழ்ப்­பாணத் தில் நீதி­த்துறை சார்ந்த ஒரு­வ­ருக்கு நீதிக்கே சவால் விடும் வகையில் தாக்­குதல் நடாத்­தி­ய­மையை தமிழ் முற்­போக்கு கூட்­டணி கண்­டிக்­கின்­றது. இந்த தாக்­குதல் காட்டு மிராண்­டி­த்த­ன­மா­ன­துடன்¸ பண்­பற்­றதும்¸ முறை­யற்­ற­து­மாகும்.

இந்த   தாக்­கு­தலின் பின்னால் பயிற்சி பெற்ற ஆயுதக்குழு­வொன்று செயற்­பட்டு வரு­வ­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. இதுவும் அச்­சத்தை ஏற்­ப­டுத்தும் ஒரு சூழ­லாக இருக்­கின்­றது. உண்­மை­யி­லேயே வடக்­கிலே வன்­முறை செயற்­பா­டுகள் இல்லை ஓய்ந்து விட்­டது என்று சொல்லும் போது, இல்லை இல்லை இன்னும் அங்கு இரு­க்கின்­றது என்று சொல்லி அர­சியல் செய்ய விரும்பும் சிலரின் செயற்­பா­டா­கவே இதனை நான் கரு­து­கின்றேன். 

தென்­னி­லங்கை பேரி­ன­வா­தி­க­ளுக்கு இது ஒரு வெறு­ம­னே மெல்லும் வாய்க்கு அவல் கிடைத்­தது போல ஒரு சூழலை தந்­தி­ருக்கும் என நினைக்­கின்றேன். இதை நினைத்து கவலை அடை­கின்றேன்.  உண்­மை­யி­லேயே அது மட்­டு­மல்ல நீதி­பதி இளஞ்­செ­ழியன் கடு­மை­யான¸ காத்­தி­ர­மான பல தீர்ப்­புக்­களை வழங்­கி­யுள்ளார். மிகவும் சர்ச்சைக்கு­ரிய வழக்­கு­களை பொறு­பேற்று செயற்­ப­டுத்தி வரு­கின்றார் அதை கண்­கா­ணித்தும் வரு­கின்றார். இந் நிலையில் அவர் மீதான தாக்­குதல் வடக்­கிலே சட்டம் ஒழுங்­குக்கு இடப்­பட்­டுள்ள சவா­லாக கரு­து­கின்றேன் .

இது தொடர்­பாக பொலிஸார் கடு­மை­யாக செயற்­பட பணிப்­புரை வழங்­க­ப்பட்­டுள்­ளது.

கிடைத்த செய்­தியின் அடிப்­ப­டையில் துப்­பாக்கிச் சூட்டு சம்­பவம் தொடர்­பாக இருவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இவர்களுக்கான வழக்குகள் நடைமுறைப்படுத்தப்பட்டு சட்ட விரோதமான செயற்பாடுகளையும் வன்முறைகளையும் இல்லாதொழிக்க நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத் துகின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.