Header Ads



கடற்கரையில் கைவிடப்பட்ட குழந்தை - காத்தான்குடி பொலிஸாரால் மீட்பு

சுமார் இரண்டு வயது மதிக்க தக்க ஆண் குழந்தை ஒன்றை மட்டக்களப்பு கடற்கரையில் விட்டு விட்டு தந்தையொருவர் தப்பியோடிய சம்பவம் ஒன்று நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த குழந்தை அநாதரவற்ற நிலையில் கடற்கரை ஒரத்தில் நின்று பரிதவித்ததை அவதானித்த கிராம மக்கள் பொலிஸாருக்கு தகவலை வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சிறுவனை மீட்டு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளதுடன் தந்தை தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.