Header Ads



தடைகளை தகர்க்கும் நடவடிக்கையில் இராணுவம்

எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட போதிலும், அதற்கு தடை ஏற்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் பவுசர்கள் வெளியேற முடியாத வகையில் வீதிகள் மூடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொலன்னாவை மற்றும் முத்துராஜவெல பகுதியின் நுழைவாயிலில் பாரியளவில் பவுசர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அந்த பவுசர்களின் டயர்களில் காற்று வெளியேற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அந்த தடைகளை தகர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.