கபீர் ஹாஷிமின் விளக்கம்..!
இந்த விடயம் தொடர்பாக மக்கள் மத்தியில் தவறான கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. இந்த தகவல்களில் எந்தவொரு உண்மையும் கிடையாது. முன்னைய ஆட்சியின் போது சீன தலைவர்கள் வருகை தந்த போது எமது தேசிய கொடியை உயர்த்த முடியவில்லை. எனினும் தற்போது அப்படியல்ல. எந்தவொரு நாட்டிற்காகவும் நாம் எமது இறையான்மையை விட்டுக்கொடுக்கமாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு உலக வர்த்தக மையத்திலுள்ள அரச தொழில் முயற்சிகள் அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
Post a Comment