Header Ads



சிறைக்குள் நீண்டுசெல்லும், விமலின் வாழ்க்கை

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவின் விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

விமல் வீரவங்சவை மார்ச் மாதம் 6 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்றைய -20- தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.


அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் விமல் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மஹிந்த ஆட்சி காலத்தில் அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமையால் விமல் கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

No comments

Powered by Blogger.